News November 24, 2024
வங்கிகளுக்கு கருணை வேண்டும்: RBI

ஓய்வூதியம், மானியம் பெறுவோரின் வங்கி கணக்குகளை எக்காரணம் கொண்டும் முடக்கக் கூடாது என வங்கிகளுக்கு RBI அறிவுறுத்தியுள்ளது. தனியார் வங்கிகளின் இயக்குநர்களுடன் RBI துணை கவர்னர் சுவாமிநாதன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, KYC பெறுவது அவசியம்தான் என்றாலும், வாடிக்கையாளர்களிடம் கருணையுடன் நடந்து கொள்வதும் அவசியம் என்றார். சேவை தரத்தை அதிகரிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.
Similar News
News August 17, 2025
அக்டோபர் 1 முதல் Gpay, Phonepeல் இந்த வசதி கிடையாது!

அவசர பணத்தேவை இருக்கும்போது, நண்பர்களிடம் போன் பண்ணி கடன் கேட்க தயங்குபவர்கள் கூட Gpay, Phonepe-ல் ஈசியாக MONEY REQUEST கொடுத்து வந்தனர். பணம் அனுப்பும் பகுதியிலுள்ள REQUEST அம்சம் மூலம் இதனை செய்யலாம். UPI பரிவர்த்தனைகளில் இந்த வசதியை அக். 1 முதல் நிறுத்த NPCI முடிவு செய்துள்ளது. பரிவர்த்தனை பாதுகாப்பை வலுப்படுத்தி மோசடிகளை தடுக்கவே இந்த முடிவாம். இனி டிஜிட்டலில் கடன் கேட்க முடியாது நண்பர்களே!
News August 17, 2025
நாளை டிரம்ப்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் நாளை டிரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ரஷ்ய அதிபர் புடினுடன் கடந்த 15-ம் தேதி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், நாளை இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. போர் நிறுத்தம் தொடர்பாக எந்த உடன்படிக்கையும் எட்டப்படாத நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
News August 17, 2025
கடைசி மூச்சு வரை.. CP ராதாகிருஷ்ணன் நெகிழ்ச்சி

கடைசி மூச்சு வரை தேசத்திற்காக கடினமாக உழைப்பேன் என துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள CP ராதாகிருஷ்ணன் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். PM மோடி, அமித்ஷா, JP நட்டா உள்ளிட்டோருக்கு நன்றி கூறியுள்ள அவர், தேசத்திற்கு சேவை செய்ய கிடைத்த வாய்ப்பை சொல்ல வார்த்தைகள் இல்லை எனவும் நெகிழ்ச்சி அடைந்துள்ளார். NDA-வுக்கு பெரும்பான்மை உள்ளதால் CP ராதாகிருஷ்ணனின் வெற்றிக்கு அதிக வாய்ப்புள்ளது.