News November 24, 2024
4 மாதங்களில் முடிவு மாறியது எப்படி?

ஏக்நாத் ஷிண்டே இனி பட்னாவிஸ் கீழ்தான் பணிபுரிய வேண்டியிருக்கும் என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. இது குறித்து பேசிய அவர், தேர்தல் முடிவுகளை நம்ப முடியவில்லை என்றார். லோக்சபா தேர்தலில் குறைந்த இடங்களில் வென்ற ஆளும் கூட்டணி, 4 மாதங்களில் எப்படி வெற்றி பெற முடிந்தது என கேள்வி எழுப்பினார்.
Similar News
News September 4, 2025
சச்சினுக்கு உயர்ந்த பொறுப்பு வழங்கும் BCCI?

BCCI தலைவராக சச்சின் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடந்த இங்கி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, சச்சினிடம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இம்மாத இறுதியில் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சச்சின் தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக,
70 வயது நிறைவடைந்ததால், BCCI தலைவராக இருந்த ரோஜர் பின்னி சமீபத்தில் ராஜினாமா செய்தார்.
News September 4, 2025
EPS-க்கு நன்றி தெரிவித்த திருமா.. ஏன் தெரியுமா?

விசிகவை திமுக மெல்ல மெல்ல விழுங்கிவிடும் என EPS எச்சரித்து இருந்தார். அதற்கு, எங்கள் மீது கரிசனம் காட்டுவதற்கு EPS-க்கு நன்றி எனவும், விளிம்பு நிலை மக்களின் விடுதலைக்கான அரசியல் பேசும் எங்களது இயக்கத்தை யாராலும் விழுங்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், விசிக நாளுக்கு நாள் வலிமை பெற்று வருவது EPS-க்கு தெரியும், ஆனால் அரசியல் காரணங்களுக்காக அவர் இப்படி பேசுவதாகவும் விமர்சித்துள்ளார்.
News September 4, 2025
விஜய் அழைத்தாலும் அரசியலுக்கு ‘நோ’: ஐஸ்வர்யா

விஜய்யே அழைத்தாலும் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மதுரையில் நகைக்கடை விழாவில் பங்கேற்ற அவரிடம், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவருக்கான வரவேற்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தனக்கு அரசியலில் நாட்டம் இல்லை என்றார். அண்மையில் நடிகை அம்பிகா, தான் அரசியலுக்கு வருவேன் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.