News November 24, 2024

திருப்பூரில் பள்ளி மாணவர்களால் ஏற்பட்ட பரபரப்பு

image

திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் நேற்று மாலை இரு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இரு தரப்பாக மோதிக்கொண்டனர். ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர், பஸ் நிலையத்துக்குள் அங்குமிங்கும் ஓடினார்கள். உடனடியாக அங்கிருந்த தெற்கு போலீஸார் விரைந்து சென்று மாணவர்களைப் பிடிக்க துரத்தினார்கள். அதற்குள் மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடித் தப்பினர். இந்தச் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News October 21, 2025

திருப்பூர் சாலைகளில் பிரச்னையா? உடனே புகார்!

image

திருப்பூர் மக்களே…, உங்கள் சாலைகளில் சேதம், பள்ளங்கள் போன்ற பராமரிப்பு குறைபாடுகள் உள்ளனவா..?, சாலை வசதியின்றி பொதுமக்கள் அவதியடைகின்றனரா..? இது போன்ற அனைத்துவிதமான பிரச்னைகளுக்கும் அரசின் ‘<>நம்ம சாலை<<>>’ செயலியில் தகுந்த புகைப்படங்கள், ஆவணங்களுடன் புகார் அளித்தால் உடனடி தீர்வு கிடைக்கும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 21, 2025

திருப்பூர்: டெலிகாம் நிறுவனத்தில் வேலை!

image

திருப்பூரில் வேலை தடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ’வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்திலேயே இலவச ‘Broadband technician’ பணிக்கான இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 56 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு உதவித்தொகையும் வழங்கப்படும். மேலும், இதில் பங்கேற்றால் வேலைவாய்ப்பு உறுதி. விண்ணப்பிக்க<> இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 21, 2025

உடுமலை: ஆற்றில் சிக்கி ஒருவர் பலி!

image

திருப்பூர்: உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அமராவதி வனச்சரகத்தில் தளிஞ்சி அருகே ஆற்றில் வெள்ளப் பெறுக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், மாரியப்பன்(40), மது(36) ஆகியோர் நேற்று முன் தினம் மாலை 5 மணியளவில் ஆற்றைக் கடக்க முயன்ற போது பரிசல் கவிந்து, மரியப்பன் அடித்து செல்லப்பட்டார். இரண்டு நாட்களுக்கு பிறகு நேற்று(அக்.20) மாரியப்பனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

error: Content is protected !!