News November 23, 2024
இரு மாநில போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம்

புதுச்சேரி எல்லையில் உள்ள நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மடுகரை சாராயக் கடையில் தமிழக டிஎஸ்பி தலைமையில் போலீசார் அதிரடியாக திடீர் சோதனையில் இன்று ஈடுபட்டனர். இதற்கு புதுச்சேரி போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு மாநில போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. புதுச்சேரி போலீசாரின் அனுமதியின்றி தமிழக போலீசார் சோதனை செய்ய எதிப்பு தெரிவித்தனர்.
Similar News
News September 13, 2025
புதுவை: கூலித்தொழிலாளி தற்கொலை

புதுவை, வில்லியனுார் கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கோபால். இவர் கடந்த மூன்று மாதங்களாக வயிற்று வலியால் பெரிதும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த அவர் நேற்று மதியம் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News September 13, 2025
புதுவை அரசு பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் துவக்கம்

பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ் இலக்கிய மன்றம் திறப்பு விழா நடந்தது. தமிழ் துறை சார்பில், பாரதியாரின் 104ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, தமிழ் இலக்கிய மன்றம் திறப்பு விழா, நல்லாசிரியர் விருது பெற்ற கலவை கல்லூரி அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் ஜெஸ்டின் ஆரோக்கியத்திற்குப் பாராட்டு விழா நடந்தது.
News September 13, 2025
புதுச்சேரி கலால் துறை முக்கிய அறிவிப்பு

புதுச்சேரி கலால் துறை நேற்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளனர். அதில் புதுச்சேரியில் 18 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு எந்த மதுபானமும் விற்கக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து வகையான மதுபான வியாபாரிகள் சில்லறை வியாபாரிகள், சாராயம் மற்றும் மது கடைகளுக்கு கலால் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.