News November 23, 2024
ஸ்ரீவி அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

ஸ்ரீவி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரும் இவரது உறவினரான ரிஷிகேசவனும் ஸ்ரீவில்லிபுத்தூர் – ராஜபாளையம் சாலை, தனியார் வெகேஷனல் சென்டர் அருகே இன்று பைக்கில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி,சாலையின் ஓரத்தில் இருந்த இரும்பு கம்பியில் மோதினர். இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரிஷிகேசவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News July 6, 2025
BREAKING சாத்தூர் பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து

கீழத்தாயில்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட விபத்தில் பாலகுருசாமி என்பவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்அனர். இந்நிலையில் ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
News July 6, 2025
BREAKING சாத்தூர் வெடி விபத்தில் போர்மேன் கைது

சிவகாசியை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான கீழதாயில்பட்டியில் செயல்படும் ஷிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பாலகுருசாமி என்பவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் போர்மேன் லோகநாதனை வெம்பக்கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News July 6, 2025
BREAKING சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் செயல்பட்டு ஷிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் சற்றுமுன் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையில் தொழிலாளர்கள் உள்ளே சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 10 கிமீ தொலைவிற்கு தொலைவிற்கு அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்.