News November 23, 2024
244ஆவது தேர்தலிலும் பத்மராஜன் தோல்வி!

வயநாடு இடைத்தேர்தலில் ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் 256 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார். இது அவருக்கு 244வது தேர்தல் ஆகும். சேலத்தை சேர்ந்த இவர் கடந்த 34 ஆண்டுகளில் வேட்புமனுவுக்காக பல கோடி செலவு செய்துள்ளார். இவர் பிரதமர் மோடி, முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, இபிஎஸ் உள்ளிட்டோருக்கு எதிராகக் களம் கண்டு தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 17, 2025
அண்ணாமலைக்கான வாக்குகளும் நீக்கம்: அ.சம்பத்

EC-யை தொடர்ந்து விமர்சித்து வரும் ராகுல் காந்தியின் வாக்குரிமையை ரத்து செய்யவேண்டுமென அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். உண்மையிலேயே வாக்குகளை திருடுவது காங்கிரஸும், திமுகவும்தான் எனவும், கோவையில் அண்ணாமலை ஜெயித்துவிடக்கூடாது என்பதற்காக அவருக்கு வாக்களிப்பவர்களின் வாக்குகள் நீக்கப்பட்டதாகவும் கூறினார். திருப்பூரில் தூய்மை பணிகளை தனியாருக்கு விடும் முயற்சியை திமுக அரசு கைவிட வேண்டுமென்றார்.
News August 17, 2025
2047-க்குள் ஒற்றை அடுக்க ஜிஎஸ்டி?

ஜி.எஸ்.டியில் பெரும் சீர்த்திருத்தம் நடைபெறவுள்ளதாக தெரிகிறது. இதுவரை 5, 12, 18, 28 என 4 அடுக்காக ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்ட நிலையில், இனி 5, 18 ஆகிய 2 அடுக்குகள் மட்டுமே நடைமுறையில் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை இது அமலுக்கு வந்து, இந்தியா வளர்ந்த நாடாக மாறினால் 2047-க்குள் ஒற்றை அடுக்கு ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News August 17, 2025
என்னுடைய முதல் எதிரி சாதி: கமல்ஹாசன்

தன்னுடைய சாதியை சொல்லி பலர் கிண்டல் செய்திருப்பதாகவும், ஆகையால் தன்னுடைய முதல் எதிரி சாதி தான் என MP கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் பேசிய அவர், ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல் மயப்படுத்தும் தலைவர்கள் அடிக்கடி வரமாட்டார்கள், அவர்கள் களத்தில் இருக்கும் போதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். பிறப்பால் நாம் யாருக்கும் உயர்ந்தவனும் இல்லை, தாழ்ந்தவனும் இல்லை என்றார்.