News November 23, 2024

இன்று, நாளை மழைக்கு வாய்ப்பு

image

தெற்கு அந்தமானில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது வடமேற்கில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக, இன்றும், நாளையும் மிதமான மழையும், நவ.25இல் இருந்து 4 நாளைக்கு பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 25ஆம் தேதி மயிலாடுதுறை நாகை, தஞ்சை, திருவாரூரில் மிக கனமழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.

Similar News

News December 26, 2025

காலணி தொழிற்சாலையை ஆய்வு செய்த CM ஸ்டாலின்!

image

உளுந்துார்பேட்டை சிப்காட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் காலணி தொழிற்சாலையை CM ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். ₹1,350 கோடி மதிப்பிலான தொழிற்சாலையின் 50% கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும் ₹139 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கலெக்டர் ஆபிஸ் உட்பட ₹1,774 கோடியில் 314 முடிவுற்ற பணிகளையும் துவக்கி வைத்தார். பின்னர், 2.16 லட்சம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

News December 26, 2025

ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவுக்கு மீண்டும் CBI சம்மன்!

image

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்த CBI விசாரணை சமீப நாள்களில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே தவெகவின் முக்கிய நிர்வாகிகளிடம் CBI அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவை டிச.29-ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சிடிஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகனுக்கும் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

News December 26, 2025

3 ஆண்டுகளாகியும் கிடைக்காத வேங்கைவயல் நீதி!

image

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் 2022 டிச.26 அன்று மனிதக் கழிவு கலக்கப்பட்டது. ஆனால் இந்த சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் ஆகியும், இதுவரை குற்றவாளிகள் யார் என்பது உறுதியாக தெரியாமல், நீதி கிடைப்பதில் தாமதம் நீடிக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், இந்த விவகாரம் திமுகவிற்கு பெரும் நெருக்கடியாக மாற வாய்ப்புள்ளது.

error: Content is protected !!