News March 21, 2024
நெல்லை அல்லது நாங்குநேரிக்கு இடைத்தேர்தல் வருமா..?

நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் எம்எல்ஏ நயினார் நாகேந்திரனும், காங்கிரஸ் சார்பில் நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரனும் போட்டியிடுவதற்காக தங்கள் கட்சியிடம் சீட்டு கேட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். ஒருவேளை இவர்களுக்கு சீட் வழங்கபட்டு ஒருவர் வெற்றிபெறும் பட்சத்தில் வெற்றிப்பெற்றவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யக்கூடும். இதனால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.
Similar News
News August 16, 2025
நெல்லை: இன்று இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று(ஆக.16) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News August 16, 2025
நெல்லை அரசு பள்ளி மாணவி விமான பயணம்

திருநெல்வேலி மாவட்டம், செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவி சபரி சந்தியாவும், அவருடன் ஆசிரியை நாலாயிரமும் அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் எம்பி சவுந்தராஜன் ஏற்பாட்டில் விமானத்தில் 2 நாள் சுற்றுலா அனுப்பி வைக்கப்பட்டனர். முதலிடம் பெற்ற மாணவி சபரி சந்தியா முதன்முதலாக விமானத்தில் பயணிப்பது குறிப்பிடத்தக்கது .
News August 16, 2025
JUST IN நெல்லையில் சுற்றுலா பயணி பலி

அம்பை அருகே ஆலடியூர் நதியுண்ணி கால்வாய் பகுதிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து குடும்பத்தினருடன் சுற்றுலா வந்த பொன் சூரியன் என்பவர் குளிக்கும் போது மூச்சுத்திணறி தண்ணீரில் மூழ்கினார். வாலிபரை தேடும் பணியில் சேரன்மகாதேவி மற்றும் அம்பை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவரது சடலத்தை மீட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.