News March 21, 2024
ஷோபா மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு

மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே மீது பெங்களூரு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புப்படுத்தி அவர் பேசியது சர்ச்சையான நிலையில், திமுக புகாரின் பேரில் அவர் மீது நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து சர்ச்சையாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் ஷோபா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News April 27, 2025
2026-ல் தமிழகத்தில் அதிமுக ஆட்சி.. உதயகுமார் உறுதி

2026 தேர்தலில் வென்று அதிமுக ஆட்சியமைப்பது உறுதி என்று EX அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த அம்மா பேரவை ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், திமுக அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 2026 தேர்தலுக்கு அதிமுக வலுவான கூட்டணி அமைத்துள்ளதாகவும், ஆதலால் தேர்தலில் வெற்றி உறுதி என்றும் குறிப்பிட்டார்.
News April 27, 2025
சீனாவே காரணம்.. மதுரை ஆதீனம்

பஹல்காம் தாக்குதல் விவகாரத்தால் பாக்.-க்கு சிந்து நதி நீரை தரக்கூடாது எனக் கூறிய மதுரை ஆதீனம், பாக்.-ஐ தனிமைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு சீனா தான் காரணம் என குற்றஞ்சாட்டிய அவர், வக்ஃபுக்காக போராடுபவர்கள் ஏன் இந்த விவகாரம் குறித்து பேசுவதில்லை என கேள்வி எழுப்பினார். பாகிஸ்தான் ஒரு மதக்கலவர பூமி என குறிப்பிட்ட ஆதீனம், சீனாவை உலக நாடுகள் ஒதுக்க வேண்டும் என்றார்.
News April 27, 2025
சுதா கொங்கரா இயக்கத்தில் சிம்பு?

சுதா கொங்கராவின் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் இணையவுள்ளதாக தகவல் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், ரசிகர்களிடையே ஹாட் டாபிக்காக இது மாறியுள்ளது. KGF படத்தை தயாரித்த ஹொம்பலே நிறுவனம் தான் இப்படத்தையும் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சிம்பு – சுதா காம்போ.. எப்படி இருக்கும்?