News March 21, 2024

ஷோபா மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு

image

மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே மீது பெங்களூரு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புப்படுத்தி அவர் பேசியது சர்ச்சையான நிலையில், திமுக புகாரின் பேரில் அவர் மீது நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து சர்ச்சையாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் ஷோபா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News August 18, 2025

ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை

image

இன்று (ஆக.18) வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தை ஏற்றத்துடன் காணப்படுகிறது. சென்செக்ஸ் 1,084 புள்ளிகள் உயர்ந்து 81,681 புள்ளிகளிலும், நிஃப்டி 363 புள்ளிகள் அதிகரித்து 24,995 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது. Maruti Suzuki, Hero Motorcop, PG Electorplast Ltd ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் உள்ள நிலையில், Hindustan Petroleum உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவில் உள்ளன.

News August 18, 2025

உக்ரைன் NATO-வில் சேரக்கூடாது: டிரம்ப்

image

உக்ரைன், NATO-வில் சேரக்கூடாது என்பதற்காகவே ரஷ்யா போரைத் தொடங்கியது. இந்நிலையில், உக்ரைன் NATO-வில் சேர முடியாது என மத்தியஸ்தம் செய்துவரும் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா கைப்பற்றிய கிரிமியா பகுதியையும் உக்ரைன் உரிமை கொண்டாடக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். ஜெலன்ஸ்கி விரும்பினால் போரை உடனடியாக நிறுத்த முடியும் (அ) தொடர முடியும் என்றும் டிரம்ப் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

News August 18, 2025

உயராத தங்கம் விலை

image

கடந்த ஒரு வாரமாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வந்த நிலையில், இன்று விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹74,200-க்கும், கிராமுக்கு ₹9,275-க்கும் விற்பனையாகிறது. தொடர்ந்து விலை குறைந்ததால், வாரத்தின் முதல் நாளான இன்று உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதால், நகை பிரியர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

error: Content is protected !!