News November 23, 2024
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி செம்பனார் கோயில் ஊராட்சிகளில் இன்று கிராம சபா கூட்டம் நடைபெற உள்ளது. ஆட்சியரின் உத்தரவின் பேரில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபா கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கலந்து கொள்ள ஊராட்சிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 13, 2025
மயிலாடுதுறை: பயிா் சேதம் கணக்கெடுப்பு பணி ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாரத்தில், கனமழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களின் சேதம் குறித்து, வேளாண்மை இணை இயக்குநர் விஜயராகவன் நேரில் ஆய்வு செய்தார். இதில் 14 உதவி வேளாண்மை அலுவலர்கள் இந்த பணியில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களின் வயலை கணக்கெடுப்பில் சேர்க்க உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News December 13, 2025
மயிலாடுதுறை: மக்களே உடனடி தீர்வு வேண்டுமா?

மயிலாடுதுறை மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்கள் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <
News December 13, 2025
மயிலாடுதுறை: காவல்துறை எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட பொது மக்கள் சைபர் குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள இணையதளத்தில், உங்கள் தனிப்பட்ட தகவல்களை அறிமுகமில்லாத நபர்களுடன் பகிர வேண்டாம். மேலும் சமூக ஊடக கணக்குகளை பலப்படுத்த பிரைவசி செட்டிங் ஐ பயன்படுத்த வேண்டும், உங்கள் புகைப்படங்கள் மற்றும் பதிவுகளில் இடம் (LOCATION) பதிவு செய்யும் அம்சத்தை முடக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


