News November 23, 2024
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி செம்பனார் கோயில் ஊராட்சிகளில் இன்று கிராம சபா கூட்டம் நடைபெற உள்ளது. ஆட்சியரின் உத்தரவின் பேரில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபா கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கலந்து கொள்ள ஊராட்சிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 22, 2025
அமைச்சரை வரவேற்ற மாவட்ட பொறுப்பு அமைச்சர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் நெல் சேமிப்பு கிடங்கினை, இன்று அமைச்சர் பெருமக்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். இதனை முன்னிட்டு மயிலாடுதுறைக்கு வருகை புரிந்துள்ள உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணியை, மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சர் சிவ.வீ. மெய்ய நாதன் சந்தித்து வரவேற்றார்.
News October 22, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் 231.60 மிமீ மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று காலை தொடங்கி இன்று அதிகாலை வரை விட்டுவிட்டு கனமழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை 6.30 மணி வரையிலான நிலவரப்படி, செம்பனார்கோவிலில் (24 மணி நேரத்தில்) அதிகபட்சமாக 48.80 மழையும், மயிலாடுதுறையில் 39.60 மி.மீ, கொள்ளிடத்தில் 44.60 மி.மீ, சீர்காழியில் 42.60 மி.மீ என மாவட்டம் முழுவதும் 231.60 மழை பெய்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News October 22, 2025
மயிலாடுதுறை: இந்திய அஞ்சல் துறையில் வேலை

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், IPPB வங்கியில் 348 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 29.10.2025
4. சம்பளம்: ரூ.30,000
5. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க