News November 22, 2024
சேலம் புத்தகத் திருவிழா: பணிகள் மும்முரம்

சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் வரும் நவம்பர் 29-ம் தேதி புத்தகத் திருவிழா தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் 150-க்கும் மேற்பட்ட புத்தக விற்பனை அரங்குகளுடன், அறிவுச்சார்ந்த பல்வேறு காட்சி அரங்குகள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News January 17, 2026
மேட்டூர் அருகே கர்ப்பிணியான 11-ம் வகுப்பு மாணவி!

சேலம்: மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் காவேரிபுரத்தைச் சேர்ந்த ராஜா(25), 11-ம் வகுப்பு மாணவியைக் காதலித்து திருமணம் செய்தார். தற்போது கர்ப்பிணியான அந்த மாணவிக்கு காய்ச்சல் ஏற்படவே, மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மாணவிக்கு 17 வயதே ஆவதை அறிந்த மருத்துவர்கள் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ராஜாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
News January 17, 2026
ஆத்தூர் கூலமேட்டில் நாளை ஜல்லிக்கட்டு திருவிழா!

ஆத்தூர்: கூலமேடு ஊராட்சியில் நாளை பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதில் 600 காளைகளும், 500 வீரர்களும் பங்கேற்கின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். அரசின் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி, எவ்வித அசம்பாவிதமுமின்றி போட்டியை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
News January 17, 2026
சேலத்தில் வரும் 31ம் தேதி வரை கெடுபிடி!

சேலம் மாநகர காவல் ஆணையர் அணில் குமார் கிரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேலம் மாநகரத்தில் அரசியல் கட்சிகள் நடத்தும். ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுகூட்டம், நடத்துவதற்கு பிரிவு 41, 1988 படி, மாநகர காவல் ஆணையரிடம் 5நாள் முன் அனுமதி பெற வேண்டும். அதன் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


