News November 22, 2024

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணி தீவிரம்

image

சிவகங்கை மாவட்டத்தில் வட கிழக்கு மழை பெய்து வருவதால் கொசு உற்பத்தி மற்றும் காய்ச்சல், தொற்று நோய் தடுப்பதற்கான சுகாதார பணிகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் ஆஷா அஜித் தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 21, 2025

சிவகங்கை: அரசு பஸ் பயணிகள் கவனத்திற்கு!

image

சிவகங்கை மக்கள் கவனத்திற்கு, நீங்கள் அரசு பஸ்ஸில் பயணம் செய்யும்போது, தவறுதலாக உங்களின் உடமைகளை பஸ்ஸிலேயே மறந்துவிட்டால் நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் குறிப்பிட்டிருக்கும் பேருந்து எண் மற்றும் விவரங்களை 18005991500 என்ற எண் (அ) 94425 90538 அழைத்து தெரிவிக்கலாம். அதனை தொடர்ந்து அதிகாரிகள் உங்களை தொடர்பு கொண்டு, உங்கள் பொருளை எங்கு வந்து பெற வேண்டும் என்பதை தெளிவாக கூறுவர். இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News August 21, 2025

சிவகங்கை: இலவச பயிற்சியுடன் வேலை வாய்ப்பு..!

image

தமிழக அரசு சார்பில், வேலையில்லா இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 12th, டிப்ளமோ (அ) டிகிரி முடித்து, 18-35 வயதுடையவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான பயிற்சி மதுரையில் வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்தவுடன், பிரபல நிறுவனங்களில் Data Analyst, AI devloper ஆக பணியாற்றும் வாய்ப்புள்ளது. மேலும் விவரங்களுக்கு<> இந்த லிங்கை கிளிக்<<>> பண்ணுங்க. SHARE IT..!

News August 21, 2025

சிவகங்கையில் நாளை உயர்வுக்குபடி முகாம்!

image

சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் நாளை ஆக.22 மாணவர்கள் பயன்பெறும் வகையில், 2024-2025 ஆம் ஆண்டில் 10,12ம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெறாத மாணவ – மாணவிகளுக்கான “உயர்வுக்குப்படி” முகாம் நடைபெற உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், ஐ டி ஐ, பாலிடெக்னிக் நிறுவனங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!