News November 22, 2024

திருச்சி: ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் வரும் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டு அரங்கில் நடைபெற உள்ள இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் ஓய்வூதியர்கள் தங்களது குறைபாடுகளை குறிப்பிட்டு வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Similar News

News August 10, 2025

திருச்சி: டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

image

பட்டதாரி இளைஞர்களே வங்கி வேலைக்கு செல்ல ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) 750 Apprentices பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தால் போதும். வயது வரம்பு 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 முதல் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE செய்யுங்க..

News August 10, 2025

திருச்சி: காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

image

காங்கிரஸ் கமிட்டியின் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தின் தில்லுமுல்லுகளை வெளிப்படுத்தியதை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில், நாளை (ஆக.11) திருச்சி மாநகரில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து அணி நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

News August 10, 2025

திருச்சி: சுற்றுச்சூழல் துறையில் வேலை! APPLY NOW

image

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்த 40 வயதிற்குப்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.68,400 வரை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் <>இந்த <<>>லிங்கை கிளிக் செய்து ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அரசு வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!