News November 22, 2024
மின் சேவை குறித்த அவசர புகார்களுக்கு உடனே அழையுங்கள்!

திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்ட தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து, இயற்கை இடர்பாடுகளால் ஏதேனும் மின் குறைபாடு இருந்தால் மின் அவசர புகார்களுக்கு 94987 94987 என்ற எண்ணை பொதுமக்கள் அழைக்கலாம். இவ்வாறு மண்டல தலைமை பொறியாளர் செல்வராஜ் நேற்று(நவ.,21) தெரிவித்துள்ளார்.
Similar News
News December 7, 2025
தென்காசி: கரண்ட் கட்.? இனி Whatsapp மூலம் தீர்வு

தென்காசி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், திடீர் கரண்ட் கட் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு – 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க
News December 7, 2025
தென்காசி: கொலை வழக்கில் 11 பேர் அதிரடி கைது

நெற்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தில் குடும்ப சொத்து பிரச்சனை காரணமாக மாற்றுத்திறனாளி விவசாயியான சங்கரலிங்கம் கொலை செய்யப்பட்ட நிலையில் வழக்குப்பதிவு செய்து அதே கிராமத்தை சேர்ந்த சங்கரலிங்கத்தின் உறவினர்களான சக்திவேல், ராமர், மாரியப்பன், பேச்சிமுத்து, சுப்புராஜ், துரை, செல்லையா, மாங்கனி, காளியம்மாள் மற்றும் மாரியம்மாள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
News December 7, 2025
தென்காசியில் சூப்பர் வாய்ப்பு! 23,000 காலியிடங்கள்..

தென்காசியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 13.12.2025 அன்று புளியங்குடி S.வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. முகாமில் 175 தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 8-ம் வகுப்பு முதல் பல்வேறு பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு 23,000 காலியிடங்கள் உள்ளன. docs.google.com/forms/d/e/1FAIpQLSdphdh6a_aY0FZFe_8uwTs_qcpatFagNc7tzxmSa_i4B6S1Sw/viewform இதில் பதிவு செய்யவும். SHARE


