News November 22, 2025
95.78% பேருக்கு SIR படிவங்கள் கொடுத்துவிட்டோம்: ECI

தமிழகத்தில் நவ.4-ல் தொடங்கிய SIR படிவங்கள் வழங்கும் பணிகளை, டிச.4-க்குள் முடிக்க வேண்டும் என்பதால் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை 95.78% வாக்காளர்களுக்கு SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாக ECI தெரிவித்துள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட 35.86% SIR படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளது.
Similar News
News February 19, 2026
நகைக் கடன் தள்ளுபடி முடிவு.. ஹேப்பி நியூஸ்

மகளிர் வங்கிக் கணக்கில் ₹5,000 டெபாசிட் செய்து TN அரசு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில், நகைக் கடன் தள்ளுபடி குறித்த தேர்தல் வாக்குறுதிக்காக மக்கள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக, கூட்டுறவு வங்கிகளில் நிலுவையிலுள்ள நகைக் கடன் விவரங்களை TN அரசு கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், நகைக் கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 19, 2026
எப்போதும் இளமையாய் இருக்க இது போதும்..

வாழைத்தண்டு சாறு, சருமத்தை நீர்ச்சத்துடன் வைத்து, பளபளப்பான மற்றும் இளமையான தோற்றத்தைத் தருகிறது. இதில் உள்ள இயற்கை தாதுக்கள், சரும சுருக்கங்களைத் தடுத்து, கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்களைக் குறைத்து, முகத்தை பொலிவாக்குகின்றன. தினமும் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடிப்பது, உடல் நச்சுக்களை நீக்கி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். SHARE.
News February 19, 2026
கூட்டணி சஸ்பென்ஸ் உடைந்தது.. தி.சீனிவாசன்

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்த நிலையில், ‘சஸ்பென்ஸ் முடிந்து விட்டது’ என திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார். யாருடன் கூட்டணி என்ற அறிவிப்பை வெளியிடாமல் சுமார் 2 மாதங்களுக்கு மேலாக பிரேமலதா சஸ்பென்ஸாக வைத்திருந்தார். திமுக அல்லது அதிமுகவுடன் தேமுதிக சேருமா அல்லது தவெகவுடன் கூட்டணி வைக்குமா என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதை சுட்டிக்காட்டும் விதமாகவே தி.சீனிவாசன் விமர்சித்துள்ளார்.


