News August 9, 2024
93வது காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டங்கில் இன்று ராஜபாளையம் ஸ்ரீ ரமணா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் சிறந்து விளங்கக்கூடிய 42 பள்ளி மாணவர்களுடனான காபி வித் கலெக்டர் என்ற 93வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
Similar News
News December 10, 2025
விருதுநகர்: கப்பலில் வேலை.. 4.5 லட்ச ரூபாய் மோசடி

சாத்துாரை சேர்ந்தவர் ஜெயவீரன் மகன் கவி விஷ்ணு. இவர் நெல்லை தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் பயின்ற போது, அவரது ஆசிரியர் டென்சிங் டேனியல் (45), மனைவி ஷர்மிளா (32) ஆகியோர் கவி விஷ்ணுக்கு சிங்கப்பூர் கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4.5 லட்சம் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் வேலை வாங்கி தரவில்லை. இதனை அடுத்து, ஆசிரியர் உட்பட 3 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து சாத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 10, 2025
விருதுநகரில் வக்கீல் சேவை இலவசம்! தெரிஞ்சிக்கோங்க…

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.விருதுநகர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04563-260310
2.உயர்நீதிமன்ற மதுரை கிளை : 0452-2433756
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 10, 2025
விருதுநகர்: ரூ.6 லட்சம் வரை மானியம்.. நேரில் செல்லுங்கள்

தமிழக அரசு உழவர் நல சேவை மையம் அமைக்க 3 முதல் 6 லட்ச ரூபாய் வரை மானியம் வழங்குகிறது. மீதம் தொகைக்கு வங்கி கடனும் ஏற்பாடு செய்து தரப்படுகிறது. இது தொடர்பாக, வேளாண் இயக்குனர் கூறுகையில், காரியாபட்டி வட்டாரத்தில் வேளாண் சார்ந்து படித்தவர்கள், வேளாண் பொருட்கள் விற்பனை, வேளாண் சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் மாவட்ட வேளாண் உதவி மைய அலுவலகத்தை நேரில் அணுகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


