News April 29, 2025
92 பயனாளிகளுக்கு ரூ.67,46, 387 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் ஈசநத்தத்தில் மக்கள் சந்திப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் இன்று நடைபெற்றது. ஈசநத்தம் ஊராட்சியில் உள்ள 25 குக் கிராமங்களுக்கு அனைத்து துறை அரசு அலுவலகங்களிலும் மக்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்துள்ளனர். மொத்தம் 92 பயனாளிகளுக்கு ரூ.67,46, 387 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
Similar News
News April 29, 2025
கரூர் அரசு உதவித் திட்ட எண்கள்

▶️ உதவி திட்ட இயக்குநர்: 7373704218
▶️ செயற்பொறியாளர்: 7373704578
▶️ உதவித் திட்ட அலுவலர்(ஊதியம்&வேலைவாய்ப்பு) : 7402607682
▶️ உதவித் திட்ட அலுவலர்(வீடுகள்&சுகாதாரம்): 7402607681
▶️ உதவித் திட்ட அலுவலர்: 7402607679
▶️ கண்காணிப்பாளர்: 7402607688
▶️ வட்டார வளர்ச்சி அலுவலர்: 7402607715
News April 29, 2025
கரூரில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது

கரூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், மது விற்க உரிமம் பெற்ற ஓட்டல்களில் வரும் மே 1-ஆம் தேதி அன்று மே தினம் மற்றும் உழைப்பாளர் தினம் என்பதால் மது விற்பனை நடைபெறாது. மீறி யாரேனும் மதுவிற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
News April 29, 2025
Myv3இல் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?

விளம்பரம் பார்த்தால் பணத்தை அள்ளலாம் என கூறி Myv3 ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாந்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். பணம் முதலீடு செய்ததற்கான அசல்ஆவணங்களுடன் நேரில் வந்து புகார் அளிக்க வேண்டும். கரூரில் யாராவது ஏமாந்திருந்தால் SHARE பண்ணுங்க.