News August 26, 2024
ரேஷன் பொருள் தட்டுப்பாடுக்கு 90% தீர்வு: முத்துசாமி

ரேஷன் பொருள் தட்டுப்பாடு பிரச்னைக்கு 90% தீர்வு காணப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். ரேஷன் கடைகளில் பொருள்கள் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டது உண்மைதான் எனக்கூறிய அவர், விரைவில் முழுமையாக தீர்வு காணப்பட்டு மக்களுக்கு தடையின்றி பொருள்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார். கடந்த 3 மாதங்களாக ரேஷனில் பருப்பு, பாமாயில் கிடைப்பதில் சற்று தட்டுப்பாடு நிலவியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 16, 2025
புதிய நிபந்தனைகளால் தவெக அப்செட்!

ஈரோடு, விஜயமங்கலம் அருகே விஜய் பங்கேற்க உள்ள பரப்புரை கூட்டத்தில் மேற்கூரை கட்டாயம் என காவல்துறை புதிய நிபந்தனை விதித்துள்ளது. மேலும், விஜய் வரும் நேரம், புறப்படும் நேரம், எந்த வழியில் வருகிறார் உள்ளிட்ட விவரங்களை முன்பே வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரசார இடத்தில் ஏற்கெனவே 80% பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், புதிய நிபந்தனைகளால் அவ்விடத்தில் மாற்றங்கள் செய்ய தவெக தயாராகி வருகிறது.
News December 16, 2025
வாசலை அலங்கரிக்கும் ஸ்பெஷல் மார்கழி கோலங்கள்!

பல்வேறு சிறப்புகள் கொண்ட மார்கழி மாதத்தில், வீட்டு வாசலில் பெண்கள் கோலம் போடுவது வழக்கம். அதிகாலையில் கோலமிட்டு இறை வழிபாடு செய்தால் நமது விருப்பங்கள் நிறைவேறுவதோடு, வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள கர்ம வினைகள் அகலும் என நம்பப்படுகிறது. அப்படியாக, வீட்டு வாசலில் போடக்கூடிய சில எளிய கோலங்கள் இங்கு போட்டோக்களாக பகிரப்பட்டுள்ளன. அவற்றை SWIPE செய்து பார்த்து வீட்டிலும் முயற்சிக்கவும்..
News December 16, 2025
அடுத்த தலைமுறையை அழிக்கும் திமுக: H.ராஜா

TN-ல் 55 மாதங்களில் 6,700 படுகொலைகள் நடந்துள்ளதாக H.ராஜா சாடியுள்ளார். இவை அனைத்தும் மது, போதை வஸ்துகளால் நிகழ்ந்தவை எனவும், போதைப்பொருள் விற்பனையில் TN முதலிடத்தில் உள்ளதாகவும் சாடினார். திமுக EX நிர்வாகி ஜாபர் சாதிக் போதைப்பொருள் வழக்கில் சிக்கியதை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ள அவர், அடுத்த தலைமுறையை அழிக்கும் நோக்கில் திமுக அரசு செயல்படுவதாக கடுமையாக விமர்சித்துள்ளார். உங்கள் கருத்து என்ன?


