News April 13, 2024

பேருந்தை கடத்தி 9 பேர் சுட்டுக்கொலை

image

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த பேருந்தை பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்தியுள்ளனர். பேருந்தில் இருந்த 9 பேரை கடத்தி சென்ற அவர்கள், துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். அதே போல, சாலையில் சென்ற கார் மீது அவர்கள் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Similar News

News July 9, 2025

மகாராஷ்டிராவை போன்று பிஹாரிலும் பாஜக சதி: ராகுல்

image

ECI உதவியோடு மகாராஷ்டிராவை போன்று பிஹார் தேர்தலிலும் முறைகேடு செய்ய பாஜக சதி செய்வதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். அம்மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை ECI மேற்கொண்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய அவர், ஏழை வாக்காளர்களை Voter List-ல் இருந்து நீக்க வாய்ப்புள்ளது என்றார்.

News July 9, 2025

₹10 யாசகம் போட்ட பெண்.. ரஜினிகாந்த் பேச்சு வைரல்

image

தனக்கு பெண் ஒருவர் ₹10 யாசகம் போட்டதாக ரஜினி பேசிய பழைய வீடியோ வைரலாகி வருகிறது. பெங்களூருவில் உள்ள கோயிலுக்கு தாம் மாறு வேடத்தில் சென்று இருந்ததாகவும், அப்போது அங்கு வந்த பெண் தன் உருவத்தை பார்த்து பிச்சை எடுப்பவர் என கருதி ₹10 அளித்ததாகவும், அதை மறுக்காமல் தாம் வாங்கிக் கொண்டதாகவும், பிறகு உண்டியலில் தாம் ₹200 போட்டதை பார்த்து அவர் தன்னிடம் வருத்தம் தெரிவித்தாகவும் கூறியுள்ளார்.

News July 9, 2025

கேட் கீப்பர் தூங்கியதே விபத்துக்கு காரணம்!

image

கடலூர் செம்மங்குப்பத்தில் நேர்ந்த விபத்துக்கு கேட் கீப்பர் தூங்கியதே காரணம் என்பது தெரியவந்துள்ளது. 7.10 மணிக்கு ரயில் வருவது குறித்து அவருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கேட்டை மூடாமல் மீண்டும் தூங்கியுள்ளார். கேட்டை மூட மறந்துவிட்டதாக பங்கஜ் சர்மா வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். So Sad!

error: Content is protected !!