News April 15, 2025

9 செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட்டால்….

image

9 செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து முருகனை வழிபட்டால், வாழ்வில் செல்வம் பெருகி , செவ்வாய் தோஷம் பாதிப்புகள் குறையும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் அதிகாலையில் நீராடி, முருக பெருமானை வழிபட வேண்டும். மாலையில் விரதத்தை முடிக்கும் வரை அன்றைய தினம் பால், பழச்சாறு மட்டுமே அருந்தி விரதத்தையும் கடைபிடிக்க வேண்டும். காலையில் இருந்து மாலை வரை கந்தசஷ்டி கவசம் உச்சரிக்க வேண்டும்.

Similar News

News November 28, 2025

ஒருவரியில் EPS-க்கு பதிலடி கொடுத்த செங்கோட்டையன்

image

கோபிசெட்டிபாளையத்தில் <<18410825>>பிரம்மாண்ட பரப்புரையை<<>> EPS மேற்கொள்ள உள்ளது குறித்து செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘நான் என்று ஒருவன் நினைத்தால் ஆண்டவன் தான் என்று காட்டிவிடுவான்’ என ஒருவரியில் பதிலடி கொடுத்தார். 3 முறை வாக்கு கேட்காமலேயே கோபி மக்கள் தன்னை வெற்றி பெற வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக கோவை ஏர்போர்ட் வந்தடைந்த KAS-க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

News November 28, 2025

பராசக்தி பட நடிகை காலமானார்

image

‘ஓ ரசிக்கும் சீமானே, ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ உள்ளிட்ட பாடல்களை கேட்காதவர்களும், குமாரி கமலாவின்(91) ஆட்டத்தை ரசிக்காதவர்களும் இருக்க முடியாது. 70 ஆண்டுகளுக்கு முன்பே PAN INDIA ஸ்டாராக திகழ்ந்த அவர், பராசக்தி, பாவை விளக்கு உள்பட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது நடனத்தால் பல மொழிகளில் ரசிகர்களை சம்பாதித்த கமலா, இறுதி காலத்தை அமெரிக்காவில் கழித்த நிலையில் வயது மூப்பால் காலமானார்.

News November 28, 2025

இலங்கை மீட்பு பணியில் இந்திய ஹெலிகாப்டர்கள்

image

<<18410040>>இலங்கை<<>> கனமழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு பணிகளில் இந்தியாவின் ஹெலிகாப்டர்கள் ஈடுபட உள்ளன. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட உதவுமாறு இலங்கை கோரிக்கை விடுத்திருந்தது. இதை ஏற்றுள்ள இந்தியா, கொழும்புவில் நிறுத்தப்பட்டுள்ள INS Vikrant போர் கப்பலில் இருந்து ஹெலிகாப்டர்களை மீட்பு பணிக்காக அனுப்ப உள்ளது.

error: Content is protected !!