News March 28, 2025

வங்கிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை

image

வரும் ஏப்ரலில் தமிழ்நாட்டில் வங்கிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை வருகிறது. ரிசர்வ் வங்கி அறிவிப்பின் படி, பின்வரும் நாள்களில் வங்கிகள் செயல்படாது: ஏப்.6 (ஞாயிறு, ராமநவமி), ஏப்.10 (மகாவீர் ஜெயந்தி), ஏப்.12, 2-ம் சனி, ஏப்.14 (தமிழ் புத்தாண்டு, விஷு), ஏப்.18 (புனித வெள்ளி), ஏப்.26 4-ம் சனி, ஏப்.13, 20, 27 – ஞாயிறு. இந்த தேதிகள் அடிப்படையில் உங்கள் வங்கிப் பணிகள், பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

Similar News

News December 1, 2025

BREAKING: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

image

கிருஷ்ணகிரியில் அதிமுகவில் இருந்து விலகிய 2,000 பேர் அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். கடந்த மாதம் 13-ம் தேதி திமுகவில் இணைந்த அதிமுகவின் Ex ஓசூர் மாநகர கிழக்கு மண்டல குழுத் தலைவர் புருசோத்தமரெட்டி தலைமையில் இந்த இணைப்பு நடைபெற்றுள்ளது. மேலும், கே.பி.முனுசாமியின் மீது அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை குறிவைத்து திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News December 1, 2025

டிரம்ப் கொள்கை: அடிவாங்கும் இந்திய IT நிறுவனங்கள்

image

டிரம்பின் கடுமையான விசா கொள்கைகளால், இந்திய IT நிறுவனங்களுக்கான விசா ஒப்புதல்கள் கடும் சரிவை சந்தித்துள்ளன. ஆய்வு ஒன்றின்படி, 2015 உடன் ஒப்பிடுகையில் H-1B விசா ஒப்புதல்கள் 70% குறைந்துள்ள நிலையில், 2024-ஐ விட 37% குறைந்துள்ளது. 2025-ம் நிதியாண்டில் வெறும் 4,573 விசா ஒப்புதல்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன. USA-வில் புதிய H-1B விசாக்களை பெறும் முதல் 5 நிறுவனங்களில் TCS மட்டுமே இந்திய நிறுவனம் ஆகும்.

News December 1, 2025

காங்., மாநில பொதுச் செயலர் கைது

image

பணமோசடி வழக்கில் காங்., கட்சியின் மாநில பொதுச் செயலர் தளபதி பாஸ்கரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவலிங்கா சிட் ஃபைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்த அவர், பலரிடம் பணமோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சென்னையில் ஹோட்டலில் தலைமறைவாக இருந்த அவரை, முற்றுகையிட்டு பணம் முதலீடு செய்தவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பாஸ்கரை கைது செய்தனர்.

error: Content is protected !!