News December 25, 2025
9 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்

திருமணம் என்பது இவருக்கு வேடிக்கையான விளையாட்டாக இருந்துள்ளது. ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பகுதியைச் சேர்ந்த வாணி, தனது அத்தையின் உதவியுடன், அப்பாவி இளைஞர்களை திருமணம் செய்து, பின்னர் பணத்துடன் தப்பி ஓடியுள்ளார். இதுவரை 8 பேரை திருமணம் செய்த வாணி, சமீபத்தில், 9-வது திருமணம் செய்தார். வாணியை திருமணம் செய்தவர், சந்தேகத்தின்பேரில் போலீசில் புகாரளிக்க, வாணியும் அவரது அத்தையும் தற்போது தலைமறைவாகி உள்ளனர்.
Similar News
News December 29, 2025
கர்ப்பிணிகளுக்கு ₹11,000 உதவித்தொகை!

கர்ப்பிணி பெண்களுக்கு ‘பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா’ திட்டத்தின் கீழ் ₹11 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு ₹5,000, 2-வது குழந்தைக்கு ₹6,000 வழங்கப்படுகிறது. ஆனால், 2-வது குழந்தை பெண் குழந்தையாக இருக்க வேண்டும். முதல் குழந்தை கருவுற்றது முதல் பிறக்கும் வரை 3 தவணை முறைகளில் உதவித்தொகை அளிக்கப்படுகிறது. முழு தகவலை அறிய & விண்ணப்பிக்க <
News December 29, 2025
Handshake விவகாரம்: மீண்டும் இந்தியாவை சீண்டும் PAK

ஆசிய கோப்பையை தொடர்ந்து சமீபத்தில் நடந்த U-19 போட்டியிலும் PAK உடன் இந்திய அணி HandShake செய்யவில்லை. இது சர்ச்சையான நிலையில், எங்களுக்கும் கைகுலுக்க வேண்டும் என்ற ஆசை இல்லை என PSB Chief மோசின் நக்வி தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த நடைமுறை இனி வரும் போட்டிகளிலும் தொடரும் எனவும், இந்தியா செய்வதை எல்லாம் செய்துவிட்டு நாங்கள் பின்வாங்க வேண்டும் என நினைக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
News December 29, 2025
செளமியா அன்புமணியின் பதவியில் காந்திமதி

பசுமைத் தாயகம் அமைப்பில் இருந்து செளமியா அன்புமணியை நீக்கி, சேலத்தில் நடைபெற்று வரும் ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பசுமைத் தாயகம் அமைப்பின் புதிய தலைவராக காந்திமதி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் பாமக செயல்தலைவராக செயல்படுவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மே 28 உடன் அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் முடிவடைந்ததாகவும் பொதுக்குழுவில் தெரிவிக்கப்பட்டது.


