News April 24, 2025

9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

image

சிவகாசி பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு பள்ளி மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாரீஸ்வரன் (25) என்ற இளைஞர் அவரை வெளியூருக்கு அழைத்துச் சென்று தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. மாணவி மாயமானதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில் மாணவியை மீட்ட போலீசார் மாரீஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Similar News

News April 24, 2025

UPSC தேர்வில் சிவகாசியை சேர்ந்த இருவர் சாதனை

image

சிவகாசியைச் சேர்ந்த கோகுல் மற்றும் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியைச் சேர்ந்த கோகுல கண்ணன் இருவரும் UPSC தேர்வில் வெற்றி பெற்று விருதுநகர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இவர்களின் வெற்றி விருதுநகர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கக்கூடிய ஒரு விஷயம். சிவகாசியில் பிரதான தொழிலாக உள்ள பட்டாசு தொழிலை மட்டும் நம்பி இருக்காமல் மாற்று தொழிலையும் ஏற்படுத்த வேண்டும் என்பது இவர்களின் ஆசையாக உள்ளது.Share.

News April 24, 2025

திருச்சி செல்லும் ஆண்டாள் சூடிய மாலை பட்டு வஸ்திரம்

image

திருச்சி ஸ்ரீரங்கத்தில் சித்திரை திருவிழாவில் சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்டத்தின் போது நம் பெருமாள், ஆண்டாள் கூடிய மாலை அணிந்து எழுந்தருளுவது வழக்கம். இதற்காக இன்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் பூ மாலை ஆகியவை திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

News April 24, 2025

விருதுநகரில் கல்லூரிக்கனவு விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டம்

image

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் +2 பொது தேர்வு எழுதிய மாணவர்களின் 100% உயர்கல்வி சேர்க்கையை வலியுறுத்தி ஏப்.27 அன்று நடைபெற இருந்த கல்லூரிக்கனவு விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டம் மே.1க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள +2 தேர்வு எழுதிய மாணவர்கள் கலந்து கொள்ளலாம். முதல் பரிசு ரூ.40,000 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9698810699 இல் அழைக்கலாம்.

error: Content is protected !!