News April 23, 2025
9 பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு இடைத்தேர்தல்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் காலியாக உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கான இடங்களுக்கான இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகள் துவங்கி உள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 9 பேரூராட்சி கவுன்சிலர்கள் பதவிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்டமாக சரிபார்க்கும் பணி நடைபெற்றதை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News December 9, 2025
சென்னிமலை: மகளுக்கு பாலியல் தொல்லை தந்தை கைது

சென்னிமலை அருகே 16 வயது சிறுமிக்கு, அவரது வளர்ப்புத் தந்தை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தாய் வங்கி வேலைக்காக வெளியே சென்றிருந்த நேரத்தில் நடந்த இச்சம்பவம் குறித்து, சிறுமி தாய்க்கு தகவல் அளித்தார்.உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்ட தாய், சென்னிமலை போலீசில் புகாரளித்தார். இதன் பேரில் வளர்ப்புத் தந்தை மீது போக்சோ சட்டத்தில் கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
News December 9, 2025
ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100, சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098 என்ற எண்ணை அழைக்கவும்.
News December 9, 2025
ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100, சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098 என்ற எண்ணை அழைக்கவும்.


