News April 5, 2025
9 காவல்துறையினருக்கு ஆயுள் தண்டனை – தூத்துக்குடி நீதிமன்றம்

தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு வின்சென்ட் என்ற விசாரணை கைதி மரணம் அடைந்தார். இது சம்பந்தமான வழக்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் தற்போது டிஎஸ்பியாக இருக்கும் ராமகிருஷ்ணன் உட்பட 9 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.
Similar News
News December 1, 2025
தூத்துக்குடி: வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி 95% நிறைவு

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தும் பணி நவம்பர் 4ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் எளிதில் படிவங்களை நிரப்பி தருவதற்கு வசதியாக சிறப்பு முகாம்களும் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டன. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 95 சதவீதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி முடிவடைந்துள்ளதாக ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
News December 1, 2025
தூத்துக்குடி: VOTER ID நம்பர் இல்லையா? – இதோ எளிய வழி!

தூத்துக்குடி மக்களே, உங்க VOTER ID எண் தெரியாதா? இதை யாருட்ட கேக்கன்னு தெரியலையா?? VOTER ID எண் இல்லாமல் கண்டுபிடிக்க வழி இருக்கு! இங்கு <
News December 1, 2025
கோவில்பட்டியில் நடந்து சென்றவருக்கு நேர்ந்த சோகம்

விருதுநகர் பரங்கிநாதபுரத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பாலசுப்பிரமணியன் (65), உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு, கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றபோது, திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை.


