News April 5, 2025
9 காவல்துறையினருக்கு ஆயுள் தண்டனை – தூத்துக்குடி நீதிமன்றம்

தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு வின்சென்ட் என்ற விசாரணை கைதி மரணம் அடைந்தார். இது சம்பந்தமான வழக்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் தற்போது டிஎஸ்பியாக இருக்கும் ராமகிருஷ்ணன் உட்பட 9 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.
Similar News
News December 16, 2025
தூத்துக்குடி விவசாயிகளுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாதம் தோறும் விவசாயிகள் தங்கள் புகார்கள், கோரிக்கைகளை தெரிவிக்கும் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் டிச.18 வியாழன் அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
News December 16, 2025
தூத்துக்குடியில் தேர்வு தேதி மாற்றம்.. கலெக்டர் அறிவிப்பு

தூத்துக்குடியில் மின்கம்பியாள் உதவியாளர் (Wireman Helper) தகுதிகாண் தேர்வு டிச.13, 14இல் நடைபெற இருந்தது. அது தற்போது 27.12.2025 மற்றும் 28.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மேலும், விண்ணப்பத்தாரர்கள் தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டினை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
News December 16, 2025
தூத்துக்குடி: டிகிரி போதும்.. ரூ.85,920 வரை சம்பளம்! APPLY NOW

தூத்துக்குடி மக்களே, பாங்க் ஆப் பரோடாவின் துணை வங்கியில் (Nainital Bank Limited) பல்வேறு பணிகளுக்கு 185 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு 01.01.2026க்குள் <


