News April 5, 2025

9 காவல்துறையினருக்கு ஆயுள் தண்டனை – தூத்துக்குடி நீதிமன்றம்

image

தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு வின்சென்ட் என்ற விசாரணை கைதி மரணம் அடைந்தார். இது சம்பந்தமான வழக்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் தற்போது டிஎஸ்பியாக இருக்கும் ராமகிருஷ்ணன் உட்பட 9 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.

Similar News

News April 17, 2025

வேளாண் அடுக்கு திட்டத்தின் கால அவகாசம் நீடிப்பு

image

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட வேளான் இணை இயக்குனர் பெரியசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் நில விவரங்களை மின்னணு முறையில் பதிவு செய்யும் வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 42 ஆயிரம் விவசாயிகள் இன்னும் பதிவு செய்யாமல் இருப்பதால் இதற்கான காலக்கெடுவை ஏப்.30 வரை நீட்டித்திருப்பதாக அதில் தெரிவித்துள்ளார்.

News April 17, 2025

தூத்துக்குடியில் உதவி எண்கள் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் உதவிக்காக தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் போலீஸ் – 100, விபத்து – 108, தீ தடுப்பு – 101, குழந்தைகள் பாதுகாப்பு – 1098, பேரிடர் கால உதவி – 1077, பாலின துன்புறுத்தல் தடுப்பு – 1091, நெடுஞ்சாலை கட்டுப்பாடு – 1033, இரத்த வங்கி உதவி – 1910, மூத்த குடிமகன் உதவி – 1253, இரயில்வே பாதுகாப்பு படை -1322, சைபர் கிரைம் – 1930 என்ற எண்களில் அழைக்கலாம்.

News April 17, 2025

டேக்வாண்டோ பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் 

image

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையத்தில் SDAT- ஸ்டார் அகாடமி டேக்வாண்டோ பயிற்சியாளர் பணி மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டரங்க அலுவலக முகவரியில் 21.04.2025 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!