News March 28, 2024

873 வாக்குச்சாவடி மையங்களில் முதலுதவி மையம்

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் 873 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளன்று கோடை வெயிலை கருத்தில் கொண்டும், வாக்காளர்களின் நலன் கருதியும் இந்த வாக்குச்சாவடி மையங்கள் அருகே முதலுதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

Similar News

News December 10, 2025

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர் மனு கூட்டம் இன்று (டிச.10) மாவட்ட காவல்அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள், காவல் நிலையத்தில் தங்கள் கொடுத்த புகார் மீதான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு குறைகளுக்கு தீர்வு காண முடியும். இந்த குறைதீர் கூட்டமானது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெறும்.

News December 10, 2025

தூத்துக்குடியில் 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற கொலை வழக்கில் பிரைன் நகரை சேர்ந்த ராஜா மற்றும் சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார். இதனையடுத்து இவர்கள் இரண்டு பேரையும் சிப்காட் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

News December 10, 2025

தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

image

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் லேசான முதல் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச 10) தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, குமரி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனை எலோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!