News March 28, 2024
873 வாக்குச்சாவடி மையங்களில் முதலுதவி மையம்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் 873 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளன்று கோடை வெயிலை கருத்தில் கொண்டும், வாக்காளர்களின் நலன் கருதியும் இந்த வாக்குச்சாவடி மையங்கள் அருகே முதலுதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
Similar News
News January 3, 2026
தூத்துக்குடி மக்கள் கவனத்திற்கு.. கலெக்டர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் உத்தரவின் பெயரில் இன்றும், நாளையும் இந்த முகாம் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ள வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளது என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். 18 வயது நிரம்பியோர், SIR பட்டியலில் பெயர் இடம்பெறாதோர் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.
News January 3, 2026
தூத்துக்குடி: ரேஷன் கார்டு வைத்திருபோர் கவனத்திற்கு!

தூத்துக்குடி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க
News January 3, 2026
தூத்துக்குடி ரயில் நேரங்களில் புதிய மாற்றம்! இதோ லிஸ்ட்…

தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில்களின் புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி 1 முதல் அமலில் வந்துள்ள இந்த அட்டவணையில், வாஞ்சி மணியாச்சி, மைசூரு, திருநெல்வேலி, சென்னை, பாலக்காடு, மேட்டுப்பாளையம், ஒகா உள்ளிட்ட முக்கிய வழித்தட ரயில்களின் புறப்படும் நேரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பயணிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். SHARE


