News September 21, 2025
8,719 பேருக்கு மருத்துவ பரிசோதனை கலெக்டர் தகவல்

கரூர் மாவட்டத்தில் மருத்துவ முகாமில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், நீரழிவு, ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதய நோயாளிகள், படுக்கையுற்ற நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை இலக்காக கொண்டு நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களின் மூலம், 3,328 ஆண்கள், 5,249 பெண்கள் உள்ளிட்ட மொத்தம், 8,719 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததாக தெரிவித்தார்.
Similar News
News September 21, 2025
கரூர்: +2 போதும்.. ரூ.60,000 சம்பளத்தில் அரசு வேலை!

கரூர் மக்களே, மத்திய அரசு பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகல்வ்யா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள விடுதி காப்பாளர், கணக்காளர் உள்ளிட்ட 7267 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு பணிக்கேற்ப +2 முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,400 – ரூ.1,51,100 வரை வழங்கப்படும். இதற்கு செப்.23ம் தேதிக்குள் <
News September 21, 2025
மண்மங்கலம் அதிமுக ஆலோசனை கூட்டம்

கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்பது குறித்து, கரூர் கிழக்கு ஒன்றியம் மற்றும் மண்மங்கலம் ஊராட்சி நிர்வாகிகள் கலந்துகொண்ட சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுகவின் கரூர் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்துகொண்டு, வரவேற்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
News September 21, 2025
கபடி போட்டியை துவக்கி வைத்த எம்எல்ஏ செந்தில்பாலாஜி!

கரூர் மாவட்டம், பெரியாண்டாங்கோவில் குடித்தெருவில், கரூர் பெரியாண்டாங்கோவில் கிளை கழகம் மற்றும் உதயா பிரதர்ஸ் கபாடி குழு இணைந்து நடத்திய முதலாம் ஆண்டு கபாடி போட்டி நேற்று இரவு தொடங்கியது. இந்தக் கபாடி போட்டியை கரூர் சட்டமன்ற உறுப்பினரும், வி. செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். அப்போது, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கழக மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.