News August 20, 2025

தமிழகத்தில் 7 மாதங்களில் 850 கொலை: சாடிய EPS

image

திமுக தேய்ந்து கொண்டிருப்பதால் வீட்டின் கதவை தட்டி உறுப்பினர்களை சேர்த்து வருவதாக EPS சாடியுள்ளார். ராணிப்பேட்டையில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் மட்டும் 850 கொலைகள் நடந்துள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டதாகவும் விமர்சித்தார். மேலும், தேர்தல் நெருங்குவதால் மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம் என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டு வருகிறது என்றார்.

Similar News

News August 20, 2025

BREAKING: அஜித் குமார் மரணம்.. அதிர்ச்சி தகவல்

image

காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கில் CBI குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில், 103 சாட்சிகளின் வாக்குமூலங்கள், 102 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் அஜித்குமாருக்கு எதிராக திருட்டு புகார் வழக்கும் CBI வசம் உள்ள நிலையில், அதன் குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. திடுக்கிடும் திருப்பமாக, இந்த வழக்கில் நிகிதா மீதும் FIR பதிவு செய்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

News August 20, 2025

பயந்து ஓடிய நேதாஜி..? பாடப்புத்தகத்தால் சர்ச்சை

image

ஆங்கிலேயர்களுக்கு பயந்து நேதாஜி ஜெர்மனிக்கு தப்பி ஓடியதாக, கேரள பாடப்புத்தகத்தில் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 4-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இந்த வரலாற்று பிழை இடம்பெற்றதாகவும், இதை அறிந்த உடன், பிழையை நீக்க உடனே உத்தரவிட்டுள்ளதாகவும் அம்மாநில கல்வி அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார். உண்மையில், ஆங்கிலேயரை விரட்டவே ஜெர்மன் சென்று ஹிட்லர் உதவியை நேதாஜி நாடினார்.

News August 20, 2025

தர்பார் தோல்விக்கு இதுதான் காரணம்: ARM ஓபன்டாக்

image

‘தர்பார்’ கதையை மிக சீக்கிரமாக எழுதியது அப்படத்தின் தோல்விக்கு காரணமாக இருக்கலாம் என ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். முதலில் அப்பா – மகள் கதையாக இருந்ததாகவும், நயன்தாரா படத்திற்குள் வந்தவுடன் கதையின் போக்கு முற்றிலுமாக மாறியதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், மும்பை பின்னணி, நடிகர்கள் உள்ளிட்டவற்றை மாற்றியிருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும் என்று தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!