News November 24, 2024

பாகிஸ்தான் கலவரத்தில் 82 பேர் பலி

image

பாகிஸ்தானில் கடந்த 3 நாள்களாக நடந்து வரும் கலவரத்தில் இதுவரை 82 பேர் பலியாகியுள்ளனர். வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமியர்கள் 2 பிரிவினர் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வதாக தெரிகிறது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஷியா பிரிவினரை சன்னி பிரிவினர் தாக்கியதால் கலவரம் வெடித்தது. இதனால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு போலீசார் திணறி வருகின்றனர்.

Similar News

News December 4, 2025

Audio Launch-க்கு பக்காவாக ஸ்கெட்ச் போட்ட ‘பராசக்தி’ டீம்

image

பொங்கலுக்கு விஜய்யின் ஜனநாயகனும், சிவகார்த்திகேயனின் பராசக்தியும் மோதுகின்றன. ஏற்கெனவே ஜனநாயகனின் ஆடியோ லான்ச் மலேசியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனவரி முதல் வாரம் ‘பராசக்தி’ ஆடியோ லான்ச்சுக்கு படக்குழு திட்டமிட்டுள்ளது. நிகழ்ச்சியை SK-வின் சொந்த ஊரான திருச்சி அல்லது மதுரையில் நடத்த அவர்கள் பிளான் போட்டு வருகின்றதாக சொல்லப்படுகிறது.

News December 4, 2025

இந்தியா தோல்விக்கு இதுதான் காரணமா?

image

358 ரன்களை குவித்தும் இந்தியா தோல்வியை தழுவியதற்கு பந்துவீச்சு மற்றும் பீல்டிங் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மார்க்ரம் 53 ரன்களில் இருக்கும்போது அவரின் கேட்சை ஜெய்ஸ்வால் தவறவிட்டார். பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுக்க தவறியதோடு, ரன்களையும் வாரி வழங்கினர். அர்ஷ்தீப், ஜடேஜா மட்டுமே SA பேட்டர்களை கொஞ்சம் கட்டுப்படுத்தினர். SA அணியின் பேட்டிங் டெப்த்தையும் இந்தியா கணிக்க தவறிவிட்டது.

News December 4, 2025

20 மாவட்டங்களில் பேய் மழை பொளந்து கட்டும்

image

சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடலூர், ராணிப்பேட்டை, தி.மலை, சேலம், குமரி, தேனி, நெல்லை உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. எனவே, அவசியமின்றி வெளியே செல்வதை தவிருங்கள்.

error: Content is protected !!