News November 24, 2024
பாகிஸ்தான் கலவரத்தில் 82 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த 3 நாள்களாக நடந்து வரும் கலவரத்தில் இதுவரை 82 பேர் பலியாகியுள்ளனர். வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமியர்கள் 2 பிரிவினர் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வதாக தெரிகிறது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஷியா பிரிவினரை சன்னி பிரிவினர் தாக்கியதால் கலவரம் வெடித்தது. இதனால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு போலீசார் திணறி வருகின்றனர்.
Similar News
News November 29, 2025
நக்சலிஸம் முற்றிலுமாக ஒழிக்கப்படும்: அமித்ஷா

60-வது டிஜிபிக்கள், ஐஜிக்கள் மாநாடு, ராய்ப்பூரில் நடைபெற்றது. இதில் பேசிய அமித்ஷா, அடுத்த மாநாட்டுக்குள் இந்தியாவில் நக்சலிஸம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என சூளுரைத்துள்ளார். நக்சலிஸத்தை முற்றிலும் ஒழிக்க, பாஜக அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறினார். நக்ஸலிசத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 2014-ல் 126ஆக இருந்த நிலையில், தற்போது ]11 ஆக குறைந்துள்ளது என்றார்.
News November 29, 2025
Ro-Koவால் தூக்கமில்லாமல் இருந்துள்ளேன்: மோர்கல்

SA-க்கு எதிரான முதல் ODI, நாளை (நவ.30) ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இதற்காக தீவிர பயிற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ரோஹித், கோலி இருவரும் ODI-ல் எப்படி விளையாடுவது என்ற அனுபவத்தை கொண்டிருப்பார்கள் என்று நம்புவதாக, பவுலிங் கோச் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார். தான், Ro-Ko-வுக்கு எதிராக பந்து வீசியபோதெல்லாம், பல தூக்கமில்லாத இரவுகளை கழித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
News November 29, 2025
வெள்ளம் நிவாரண முகாமாக மாறும் கொழும்பு ஸ்டேடியம்

‘டிட்வா’ புயல், இலங்கையில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. வெள்ளம் & நிலச்சரிவால் இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில், கொழும்பு பிரேமதாஸ ஸ்டேடியத்தில், சுமார் 3,000 பேரை தற்காலிகமாக தங்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அவர்களுக்கு அடிப்படை வசதிகள், நிவாரண பொருள்களும் வழங்கப்படவுள்ளன.


