News June 20, 2024
மாசுபாடு காரணமாக 81 லட்சம் பேர் பலி

உலகளவில் மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்நிலையில், 2021ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் காற்று மாசுபாட்டால் 81 லட்சம் பேர் உயிரிழந்தது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் HEI என்ற அமைப்பு யுனிசெப் அமைப்புடன் இணைந்து ஆய்வை மேற்கொண்டது. அதில், அதிகபட்சமாக இந்தியாவில் 21 லட்சம் பேரும், சீனாவில் 23 லட்சம் பேரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
Similar News
News September 15, 2025
GALLERY: ரெஸ்ட்டில் இவ்ளோ வகைகளா?

ரெஸ்ட் எடுக்கணும் என்றால், சரி கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றுதானே யோசிப்போம். ஆனால், மனிதர்களுக்கு 6 வகையான ரெஸ்ட் தேவை என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், நமது உடலையும், மூளையும் மீண்டும் ‘Reset’ பண்ண இது தேவை என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். அவற்றை பற்றி தெரிந்துகொள்ள, மேலே உள்ள போட்டோஸை Swipe பண்ணி பாருங்க. உங்களுக்கு இதில் எத்தனை விதமான ரெஸ்ட் தேவைப்படுது?
News September 15, 2025
உலகை இயக்கும் இன்ஜின்கள்.. இன்று இன்ஜினியர்கள் டே!

இன்ஜினியரிங் படித்தவன் மட்டும்தான் எந்த துறையிலும் நுழைந்து வென்றுவிடுவான். ஏனென்றால், அவன் 4 ஆண்டுகள் படிப்பது வெறும் பாடத்தை அல்ல.. தத்துவத்தை! தலைசிறந்த பொறியாளராகக் கருதப்படும் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளை தான் பொறியாளர் தினமாக கொண்டாடுகிறோம். சினிமா முதல் விளையாட்டு வரை, பாலிடிகஸ் முதல் பிஸினஸ் வரை எங்கும் இன்ஜினியர்கள்தான். நாளைய உலகை சிறப்பாக்கும் அனைத்து இன்ஜினியர்களுக்கு சல்யூட்!
News September 15, 2025
அருண் விஜய்யை ரத்தம் வரும் அளவுக்கு குத்திய நடிகர் தனுஷ்

இட்லி கடை செட்டில் சண்டைக்காட்சியை படம்பிடிக்கும்போது, தான் அருண் விஜய்யை நிஜமாக குத்திவிட்டதால் அவருக்கு ரத்தம் வந்ததாக நடிகர் தனுஷ் பேசியுள்ளார். அப்போது கடுமையாக காயம் ஏற்பட்டிருந்த போதும் ஐஸ் பேக் வைத்துவிட்டு உடனே அடுத்த ஷாட்டுக்கு அருண் விஜய் நடிக்க வந்துவிட்டதாகவும், அந்த இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் 2 மணி நேரம் ஷூட்டிங் நின்றிருக்கும் எனவும் தனுஷ் கூறினார்.