News April 30, 2025

800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

image

பரமக்குடி அருகே எமனேஸ்வரம் சிவன் கோயிலில் பாண்டியர் காலத்து 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு தலைவர் எமனேஸ்வரம் சிவன் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். அம்மன் சன்னதியில் உள்ள முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கல்வெட்டு தான் இக்கோயிலில் பழமையானது. எனவே இங்குள்ள கல்வெட்டு கி.பி13 ஆம் நுாற்றாண்டு சுந்தரபாண்டியன் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம்.*ஷேர் பண்ணுங்க

Similar News

News December 12, 2025

ராம்நாடு: டூவீலரை ரயில்வே டிராக்கில் போட்டு ஒடிய இளைஞர்

image

உச்சிப்புளி அருகே பூட்டியிருந்த ரயில்வே கேட்டில் இருசக்கர வாகனத்தை அத்துமீறி கடந்து ரயில் அருகே வந்தததால் அப்படியே பைக்கை அப்படியே போட்டு விட்டு ஒடிய உச்சிப்புளி பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விசாரணையில் டாஸ்மாக் கடையை அடைக்க நேரம் ஆனதால் கேட்டை தாண்டி தண்டவாளத்தை கடந்தாக இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

News December 12, 2025

ராமநாதசுவாமி கோவில் நடைதிறப்பில் மாற்றம்

image

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் மார்கழி மாதத்தினை முன்னிட்டு டிசம்பர் -16ம் தேதி முதல் அதி காலை 3:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4 மணிமுதல் 4:30 மணிவரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். 5 மணிக்கு தனுர்மாத திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்று தேவாரம், திருவெம்பாவை, ஓதுதல் நடைபெற்று தீபாராதனை நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News December 12, 2025

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (டிச.11) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!