News April 30, 2025
800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

பரமக்குடி அருகே எமனேஸ்வரம் சிவன் கோயிலில் பாண்டியர் காலத்து 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு தலைவர் எமனேஸ்வரம் சிவன் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். அம்மன் சன்னதியில் உள்ள முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கல்வெட்டு தான் இக்கோயிலில் பழமையானது. எனவே இங்குள்ள கல்வெட்டு கி.பி13 ஆம் நுாற்றாண்டு சுந்தரபாண்டியன் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம்.*ஷேர் பண்ணுங்க
Similar News
News November 26, 2025
ராம்நாடு: வேன் – கார் மோதிய விபத்தில் 2 பேர் பலி

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தோர் ராமேஸ்வரம் சென்று விட்டு சென்னைக்கு சுற்றுலா வேனில் உச்சிப்புளி அருகே நாகாச்சி பகுதியில் இன்று காலை சென்றனர். அப்போது ஆந்திரா – ராமேஸ்வரத்திற்கு வந்த காரும், வேனும் நேருக்கு நேர் மோதியது. காரில் பயணித்த பைடி சாய்(23), நவீன்(22) ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர், காரில் பயணித்த 4 பேர், வேனில் பயணித்த 5 பெண், 9 ஆண் காயமடைந்னர். உச்சிப்புளி போலீசார் விசாரனை.
News November 26, 2025
BREAKING ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதியில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வரும் காரணத்தால் இன்று (நவ 26) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
News November 26, 2025
இராம்நாடு: அரசு அலுவலகத்தில் பூட்டை உடைத்து திருட்டு

கட்டிவயல் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பூட்டை நேற்று (நவ.25) மர்ம நபர்கள் உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பீரோவை உடைத்து ஆவணங்களை குலைத்து திருட முற்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து கணினியில் CPU மட்டும் திருடி சென்றனர். இது குறித்து திருவாடானை போலீசார் மர்ம நபர்கள் குறித்து அப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.


