News April 13, 2025

8 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

image

ஆந்திராவின் கைலாசப்பட்டினத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹50,000 நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7 பேர் படுகாயமடைந்து ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News November 26, 2025

சினிமாவில் இருந்து விலகுகிறேன்… அறிவித்தார்!

image

‘சென்னை 28’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், இயக்குநர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி. பின்னர் ரஜினிகாந்துடன் அவர் நடித்த அனிமேஷன் படம் பாதியில் கைவிடப்பட்டது. தொடர்ந்து அஞ்சாதே, வெண்ணிலா வீடு என பல படங்களில் நடித்த அவர், கடைசியாக ’மிடில் கிளாஸ்’ என்ற படத்தில் நடித்து கவனம் பெற்றார். இந்நிலையில் தனிப்பட்ட வாழ்க்கைச் சூழலுக்காக சினிமாவிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

News November 26, 2025

நெல் பாதிப்பு.. ஏக்கருக்கு ₹25,000 வழங்குக: EPS

image

மழையினால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈட்டை காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும் என EPS தெரிவித்துள்ளார். பருவமழைக்கு முன்பாக வாய்க்கால்களை அரசு தூர் வாராததே பயிர்கள் நீரில் மூழ்க காரணம் என்றும் அவர் சாடியுள்ளார். மேலும், அரசின் சார்பாக நெல் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ₹25,000 நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும் என CM ஸ்டாலினை அவர் வலியுறுத்தியுள்ளார்.

News November 26, 2025

International Roundup: ஃபிரான்ஸ் EX அதிபருக்கு சிறை

image

*ஆப்பிரிக்க நாடான கினி பிசாவ்வோவில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. *இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 17 பேர் பலி. *ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சார்கோசியின் சிறை தண்டனையை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. *உக்ரைன் விவகாரம் தொடர்பாக டிரம்ப் – புடின் ஆலோசகர்களின் தொலைபேசி அழைப்புகள் லீக்கானது. *பாலஸ்தீனின் மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

error: Content is protected !!