News April 13, 2025
8 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

ஆந்திராவின் கைலாசப்பட்டினத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹50,000 நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7 பேர் படுகாயமடைந்து ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News November 20, 2025
ஒரே நாளில் அதிரடியாக ₹3,000 குறைந்தது

வெள்ளி விலை இன்று(நவ.20) கிலோவுக்கு ₹3,000 குறைந்துள்ளது. 1 கிராம் ₹173-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,73,000-க்கும் விற்பனையாகிறது. அமெரிக்கா, சீனா போன்ற முக்கிய நாடுகளுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் காரணமாக இந்தியாவில் வெள்ளி விலை வீழ்ச்சி கண்டுள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். இது சில வாரங்கள் நீடிக்கும் என கணித்துள்ளதால் முதலீட்டாளர்கள் கவனமாக இருப்பது நல்லது.
News November 20, 2025
மெட்ரோ விவகாரத்தில் நடந்தது என்ன? மத்திய அரசு விளக்கம்

கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்காமல் பாஜக அரசியல் செய்வதாக CM ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில், TN அரசு பரிந்துரைத்துள்ள 7 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு போதுமான இடவசதி தெரிவிக்கப்படவில்லை எனவும் அதனால்தான் திருப்பி அனுப்பியதாகவும் மத்திய அமைச்சர் மனோகர்லால் விளக்கமளித்துள்ளார். மேலும், மக்களுக்கான மெட்ரோ திட்டத்தை ஸ்டாலின் தான் அரசியல் ஆக்குகிறார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News November 20, 2025
உலகின் மீள நீளமான 7 நதிகள்!

நதிகள் என்பவை ஒவ்வொரு கண்டத்தின் நிலப்பரப்பிலும் ஆழமாக பதிந்திருக்கும் பூமியின் ரத்த நாளங்கள் போன்றவை. உலகிலேயே மிகவும் நீளமாக உள்ள நதி 11 நாடுகள் வழியாக பாய்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அதுமட்டுமல்ல நமது கங்கை நதியை விட மூன்று மடங்கும் அதிக நீளம் கொண்டது. எந்த நதி என்று தெரிந்து கொள்ளவும், உலகின் மிக நீளமான மற்ற நதிகள் எதுவென்று அறியவும் மேலே SWIPE பண்ணுங்க.


