News April 13, 2025
8 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

ஆந்திராவின் கைலாசப்பட்டினத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹50,000 நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7 பேர் படுகாயமடைந்து ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News December 10, 2025
மீண்டும் இணைகிறாரா ஓபிஎஸ்? இன்று காலை முடிவு

TTV, OPS-ஐ மீண்டும் NDA கூட்டணிக்குள் கொண்டுவரும் பணி வேகமெடுத்துள்ளது. TTV, OPS-ஐ தனித்தனியாக சந்தித்து பேசிவிட்டு, டெல்லிக்கு சென்ற அண்ணாமலை, அமித்ஷாவிடம் ரிப்போர்ட்டை கொடுத்து ஆலோசித்துள்ளார். இதன்பின் இருவரையும் கூட்டணியில் இணைப்பது குறித்து பாஜக தலைமை இபிஎஸ்ஸிடம் பேசியதாகவும், இன்று காலை அதிமுக பொதுக்குழுவுக்கு பின் இதுதொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
News December 10, 2025
ஒழுங்கற்ற மாதவிடாயா? 14 நாள்களில் தீர்வு!

பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் பிரச்னையால் அவதிப்படுகின்றனர். இது தொடர்பான அனைத்து பிரச்னைகளும் விலக பின்வரும் விதைகளை நீங்கள் சாப்பிட்டாலே போதும். மாதவிடாய் முடிந்த பிறகு 14 நாட்கள் சூரியகாந்தி, எள் விதைகளை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு வரும் 14 நாட்கள் பூசணி, ஆளி விதைகளை சாப்பிடவும். இது உங்கள் மாதவிடாய் சுழற்சியை சீர் செய்யும் என டாக்டர்கள் சொல்றாங்க. பல பெண்களுக்கு பயனளிக்கும், SHARE THIS.
News December 10, 2025
தங்கம் விலை தாறுமாறாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $28.27 உயர்ந்து, $4,217.15-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தை கண்டு வருகிறது. நேற்று (டிச.9) மட்டும் சவரனுக்கு ₹320 குறைந்து, ₹96,000-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.


