News April 13, 2025

8 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

image

ஆந்திராவின் கைலாசப்பட்டினத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹50,000 நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7 பேர் படுகாயமடைந்து ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News November 18, 2025

விஜய் + அதிமுக கூட்டணி… முடிவை தெரிவித்தார்

image

அதிமுக கூட்டணியில் தவெக இடம்பெறுமா என அண்மைக்காலமாக யூகங்கள் எழுந்து வருகின்றன. பாஜக இருக்கும் கூட்டணியில் தாங்கள் இடம்பெறமாட்டோம் என தவெக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர அதிமுக முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில், தவெக விரும்பினால் அவர்களுடன் கூட்டணி குறித்து EPS பேசுவார் என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் தவெக இடம்பெறுமா?

News November 18, 2025

தமிழ்நாட்டில் இவ்வளவு தங்கம் இருக்கா?

image

தங்கத்தை தமிழர்கள் ஒரு முதலீடாகவோ அல்லது அந்தஸ்தின் அடையாளமாக மட்டும் பார்க்கவில்லை. மாறாக, ஆபத்தில் உதவும் சேமிப்பாக கருதுகிறார்கள். அதனால் தான் சிறுக சிறுகவாவது தங்கத்தை வாங்கிட விரும்புகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில் உள்ள மொத்த தங்கம் எவ்வளவு தெரியுமா? 6,720 டன் தங்கம்! இது அமெரிக்க அரசின் தங்க இருப்புக்கு சமமானதாகும். ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா ஆகிய நாடுகளின் தங்க இருப்பைவிட அதிகமாம்.

News November 18, 2025

ரேஷன் கடைகளில் இலவச நாப்கின்.. HC-ல் மனுதாக்கல்

image

ரேஷன் கடைகளில் சானிட்டரி நாப்கின் வழங்க கோரிய வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு மெட்ராஸ் HC உத்தரவிட்டுள்ளது. அதிக விலை காரணமாக நாப்கின்களை வாங்க முடியாத கிராமப்புற பெண்கள், மாற்று நடைமுறைகளை பின்பற்றுவதாக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், பள்ளி மாணவியருக்கு நாப்கின் வழங்குவது போல் ரேஷன் கடைகளிலும் வழங்க உத்தரவிடுமாறு கோரப்பட்டு இருந்தது. அடுத்தக்கட்ட விசாரணை, டிச.16-ல் நடைபெறவுள்ளது.

error: Content is protected !!