News April 30, 2024
கள்ளச்சந்தையில் IPL டிக்கெட் விற்ற 8 பேர் கைது

கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 8 பெற போலீசார் கைது செய்துள்ளனர். CSK-SRH இடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியைக் காண வந்த ரசிகர்களிடம், சிலா் அதிக விலைக்கு டிக்கெட் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் சரவணன், நவீன் குமார் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து ரூ.72,242 மதிப்புள்ள 26 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Similar News
News February 6, 2026
அஜித் குமார் மரணம்.. அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

காவலாளி அஜித் குமார் மரண வழக்கு மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அஜித் குமாரை விசாரிக்க டிஎஸ்பிக்கு உயரதிகாரி ஒருவர் அழுத்தம் கொடுத்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. யார் அந்த உயரதிகாரி என கேள்வி எழுப்பிய அஜித் குமார் தரப்பு வழக்கறிஞர், கணேஷ் குமார், பொய்யாக புகார் அளித்த நிகிதா, சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
News February 6, 2026
UPI பேமெண்ட்டில் வரும் அதிரடி மாற்றங்கள்

நமது அன்றாட வாழ்வில் முக்கிய அங்கமாக மாறியுள்ள UPI பேமெண்ட் முறையில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக பாதுகாப்பு காரணங்களுக்காக, நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் செயலற்ற ஐடிக்களை முடக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், கடினமான நடைமுறையாக இருந்த Autopay Cancellation எளிமையாக்கப்பட்டுள்ளது. அதேபோல் இனி பரிவர்த்தனைகள் 10 விநாடிகளுக்குள் முடிந்துவிடும் எனவும் கூறப்படுகிறது.
News February 6, 2026
சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.. இபிஎஸ் அதிர்ச்சி

அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து சசிகலா தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது அதிமுக EX MLA ரத்தினசபாபதி சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதனிடையே சசிகலாவை சந்தித்த அமமுக மாணவரணிச் செயலாளர் ஜீவிதா நாச்சியாரை டிடிவி தினகரன் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். அதிமுக, அமமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து சசிகலாவை சந்தித்திருப்பது TTV, EPS-க்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ளது.


