News October 20, 2024
8 வழிச்சாலையாகும் சென்னை – திருச்சி நெடுஞ்சாலை

சென்னை – திருச்சி நெடுஞ்சாலையை அதிவேக 8 வழிச்சாலையாக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. வாகன பெருக்கம், நெரிசல், சாலை விபத்துகள், பயண நேரம் குறைப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 310 கி.மீ. தொலைவை 6 மணி நேரத்திற்கு பதிலாக 4 மணி நேரத்திலேயே கடக்க முடியும் எனக் கூறப்படுகிறது. இதற்கான பணிகள் 2025 மத்தியில் தொடங்குகிறதாம்.
Similar News
News July 5, 2025
வெந்நீரில் குளித்தால் ஆண்மை குறைபாடு ஏற்படுமா?

ஆண்கள் வெந்நீரில் அதிக நேரம் குளிப்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் செயல்திறனும் குறைய வாய்ப்புள்ளதாக California University ஆய்வு கூறுகிறது. ஷவரில் குளிப்பதை விட, குளியல் தொட்டிகளில் குளிப்பதால் பாதிப்பு அதிகமாம். அதேநேரம், வெந்நீரில் குளிப்பதை நிறுத்திய சில மாதங்களில், பாதிப்பு சரியாகி விடுமாம். ஆகவே, சாதாரண தண்ணீரில் குளிப்பது நல்லது, உடல் அசதியாக இருக்கையில் வெந்நீர் குளியல் போடலாமாம்.
News July 5, 2025
இரவு இங்கெல்லாம் மழை பெய்யும்: IMD

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், நீலகிரி, தென்காசி, தேனி, புதுக்கோட்டை, தஞ்சை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாம். நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடுமாம். உங்க ஊர் நிலவரம் எப்படி இருக்கு?
News July 5, 2025
தவெக ஆலோசகர் பொறுப்பில் இருந்து PK விலகல்

விஜய்யின் தவெகவிற்கான அரசியல் ஆலோசனைக் குழுவில் இருந்து பிரசாந்த் கிஷோர் (PK) தற்காலிகமாக விலகியுள்ளார். பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால் அங்கு தனது (ஜன் சுராஜ்) கட்சியை வலுப்படுத்த கவனம் செலுத்துவதால் விலகியுள்ளார். நவம்பர் மாதத்திற்கு பிறகு மீண்டும் தவெகவுக்கு தேர்தல் வியூகம் வகுக்கும் குழுவில் இடம் பெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.