News April 4, 2025

8 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

image

தமிழ்நாட்டில் 8 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு டிஜிபி பொறுப்பை ரூபேஸ் குமார் மீனா கூடுதலாக கவனிக்க உள்ளார். தீயணைப்புத்துறை டிஜிபியாக சீமா அகர்வாலும், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக சந்தோஷ் குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை போக்குவரத்து துணை ஆணையராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Similar News

News September 20, 2025

இவ்வளவு விலையா?

image

இன்றைய உலகில் விலையை எது வரையறுக்கிறது. ஆடம்பரமான உடைமைகளா? தனித்துவமான பொருள்களா ? பழைமையான வரலாற்று சிறப்புடையதா? பல்வேறு காரணிகள் உள்ளன. அந்த வகையில் மேலே, உலகில் மிகவும் விலை உயர்ந்த சிலவற்றை கொடுத்து இருக்கிறோம். அதை ஒவ்வொன்றாக பாருங்க. இதில் இல்லாத உங்களுக்கு தெரிந்த விலை உயர்ந்தவை ஏதேனும் இருந்தா கமெண்ட்ல சொல்லுங்க.

News September 20, 2025

₹1,20,000 கடன் வழங்குகிறது தமிழக அரசு.. GOOD NEWS

image

தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் 2 கறவை மாடுகள் (எருமை உட்பட) வாங்குவதற்காக 7% வட்டி விகிதத்தில் ₹1,20,000 வரை கடனுதவி வழங்கப்படுவதாக TN அரசு அறிவித்துள்ளது. கறவை மாடு ஒன்றுக்கு ₹60,000 கடன் வழங்கப்படும். திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள். சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ் சமர்பித்தால், கடன் (குடும்பத்தில் ஒருவருக்கு ) வழங்கப்படும்.

News September 20, 2025

தனி விமானம் மூலம் நாகைக்கு பறந்தார் விஜய்

image

செப்.13-ல் தேர்தல் பரப்புரையை தொடங்கிய விஜய், சனிக்கிழமைதோறும் மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில், இன்றைய தினத்துக்கான பிரசாரத்தை மேற்கொள்ள, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அவர் நாகைக்கு புறப்பட்டார். புத்தூர் ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே இன்று நண்பகல் 12.30 மணியளவில் விஜய் உரையாற்றவுள்ளார். அரைமணிநேரம் மட்டுமே காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

error: Content is protected !!