News April 27, 2025

நுரையீரலில் 8 cm கத்தி : ஷாக்கிங் ஆப்ரேஷன்

image

சந்தோஷ் தாஸ் என்பவரின் நுரையீரலில் இருந்து 8 cm நீளமுள்ள கத்தியை ஒடிசா அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். 3 வருடங்களுக்கு முன்பு பெங்களுருவில் கத்தியால் குத்தப்பட்ட தாஸுக்கு சிகிச்சை முடிந்தபின்பும் வறட்டு இருமல் இருந்துள்ளது. இதற்காக 8 மாதங்களாக சிகிச்சை பெற்ற நிலையிலும் குணமாகவில்லை. இந்நிலையில், சிடி ஸ்கேனில் கத்தி இருந்தது கண்டறியப்பட்டு தற்போது நீக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 23, 2025

நான் குற்றம் செய்யவில்லை: பி.ஆர்.பாண்டியன்

image

ஓஎன்​ஜிசி வழக்கில் 13 ஆண்டு சிறையை <<18612508>>HC நிறுத்தி வைத்த<<>> நிலையில், விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து வெளியில் வந்த அவர் பேசுகையில், நான் எந்​த குற்​ற​மும் செய்​ய​வில்​லை. அந்த தொழிற்​சாலை தீப்​பிடித்து எரிந்​ததற்​கும், எனக்​கும் எந்த சம்பந்​த​மும் இல்​லை. சம்​பவம் நடந்த மறுநாள்​ தான் நான் அங்கு சென்​றேன் என்​றார்.

News December 23, 2025

விமானங்கள் வெள்ளை கலரில் இருக்க காரணம் என்ன?

image

➤வெள்ளை நிறம் சூரிய ஒளியை உறிஞ்சாததால், விமானம் குளிர்ச்சியாக இருக்கும் ➤மற்ற நிறங்களை போல அல்லாமல் வெள்ளையை அடிக்கடி Paint செய்யவேண்டாம். எனவே பெயிண்ட்டால் கூடும் எடையும், அதற்கான எரிபொருள் செலவும் மிச்சம் ➤வானத்திலும், தரையிலும் விமானத்தை எளிதில் காண வெள்ளை நிறம் உதவும் ➤விமானத்தில் சேதம், எண்ணெய் கசிவு ஏற்பட்டால் நன்றாக தெரியும். 99% பேருக்கு தெரியாத இந்த தகவலை SHARE பண்ணுங்க

News December 23, 2025

மகளிர் உரிமைத் தொகை.. மக்களுக்கு அதிர்ச்சி

image

மகளிர் உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ₹1,000-ல் இருந்து சில நூறுகள் அதிகரிக்கும் என செய்தி வெளியாகி இருந்தது. ஆனால், அதற்கான அறிவிப்பு இப்போது வெளியாகாது எனக் கூறப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகையை ₹1,500-ஆக உயர்த்தி வழங்குவோம் என திமுக தேர்தல் வாக்குறுதி அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் உரிமை தொகை உயருமாம்.

error: Content is protected !!