News March 23, 2025

8 வயது சிறுவனிடம் பாலியல் அத்துமீறல்!

image

தி.மலை, செங்கம் அருகே 8 வயது சிறுவன் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது சமையல்காரராக பணிபுரிந்து வரும் 45 வயதான முருகன் என்பவர் மது போதையில் அந்த சிறுவனை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். பின் சிறுவனின் ஆடைகளை கழற்றி நிர்வாணமாக்கி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அவ்வழியே வந்த சிலர் முருகனை பிடித்து அடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Similar News

News September 22, 2025

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ், இன்று (செப். 22) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். மக்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார். இந்தக் கூட்டத்தில் 215 மனுக்கள் பெறப்பட்டன.

News September 22, 2025

தி.மலை: கடத்தலில் ஈடுப்பட்ட காவலர் கைது

image

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே அரிய வகை எறும்புத்தின்னியை வேட்டையாடி, அதன் செதில்களை விற்க முயன்ற ஜமுனாமரத்தூர் தீயணைப்பு வீரர் ஜெயபால் உட்பட இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். புரோக்கர்கள் போல் நடித்து வனத்துறையினர் அவர்களைப் பிடித்தனர். சுமார் 3 கிலோ எடையுள்ள செதில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தப்பி ஓடிய ராஜசேகர் என்பவரைத் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

News September 22, 2025

தி.மலை: பெண்களுக்கு செம்ம வாய்ப்பு – வங்கி கடன் திட்டம்!

image

தி.மலை மாவட்ட பெண்களே! பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள்? உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமும் இன்றி ரூ.1 லட்சம் முதல் கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இது குறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!