News April 12, 2025
8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசுத் துறையில் வேலை

நாகை மாவட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் மாவட்ட சித்த மருத்துவத் துறையில் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நல வாழ்வு சங்கம் மூலம் அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. ஆர்வம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தை தொடர்பு கொண்டும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 9, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி

நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே மணக்குடி வையாபுரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் இன்று நடைப்பெற்றது. இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மூன்று பேருக்கு தலா ரூ.14500 வீதம் ரூ 34500 மதிப்பிலான சக்கர நாற்காலிகளை வழங்கினார்.
News August 9, 2025
நாகையில் துறைமுகம் மேம்படுத்துதல் குறித்த கூட்டம்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாகை துறைமுகம் சம்பந்தமான கூட்டம், இன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு மேரி டேம் போர்டு சேர்மன் தலைமையில் நடைபெற்றது. இதில், இந்திய வர்த்தக தொழிற்குழுமம் சார்பில், தலைவர், செயலாளர் மற்றும் முன்னாள் தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் நாகை துறைமுகத்தை 4 மீட்டர் ஆழப்படுத்தி, சாகர்மாலா திட்ட கீழ் சிறிய கப்பல் கையாள்வதற்கு குறித்தும் அலோசிக்கப்பட்டது.
News August 9, 2025
நாகை: பெற்றோர்கள் கவனத்திற்கு! இதை தெரிஞ்சிக்கோங்க!

நாகை மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த எண்களை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். 24 மணி நேரமும் பாதுகாப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
சைபர் பாதுகாப்பு ( 1930 )
இந்த எண்களை Save பண்ணி வச்சுக்கோங்க ! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!