News April 12, 2025

8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசுத் துறையில் வேலை

image

நாகை மாவட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் மாவட்ட சித்த மருத்துவத் துறையில் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நல வாழ்வு சங்கம் மூலம் அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. ஆர்வம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தை தொடர்பு கொண்டும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 27, 2025

நாகை: புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

image

நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழக்தில் உள்ள ஒன்பது துறைமுகங்களில் இன்று காலை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. குமரிக்கடல் அருகே நிலவும் வளிமண்டலக் கீழடுக்கு காற்று சுழற்சி காரமாக கடலில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என்பதால் இந்த எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என ஏற்கனவே அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 27, 2025

நாகை: விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

image

நாகை மாவட்டத்தில் வயல்கள் ஏதேனும் மழைநீரில் மூழ்கி இருந்தால், பயிர்களில் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நீர் வடிந்த பிறகு விவசாயிகள் ஏக்கருக்கு யூரியா, ஜிப்சத்துடன் கூடிய வேப்பம் புண்ணாக்கை வயலில் இடவேண்டும். இதுகுறித்த கூடுதல் தகவல் தேவைப்படுவோர் அருகில் உள்ள வேளாண் துறை அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 27, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி ஒருங்கிணைப்பில், மாவட்ட அளவிலான கல்விக் கடன் முகாம், உயர்கல்வி படிப்புகளான மருத்துவம், பொறியியல், விவசாயம், கால்நடை படிப்புகளுக்கான கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள், கல்வி கடனுக்கு விண்ணப்பிக்க மற்றும் கல்வி கடன் பற்றிய ஆலோசனைகளை பெற வரும் 27-ஆம் தேதி முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!