News August 15, 2025
79th Independence Day: நயா பாரத் என்றால் என்ன?

நாட்டின் 79-வது சுதந்திர தினம் ‘Naya Bharat’ என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது. அதாவது, வளங்கள், பாதுகாப்பு மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்கும் ‘வளர்ச்சியடைந்த பாரதம் 2047’ என்ற இலக்கை நோக்கிய பயணத்தையே இந்த நயா பாரத் குறிக்கிறது. இதனையொட்டி டெல்லி செங்கோட்டையில் 12-வது முறையாக கொடியேற்றும் PM மோடி, நாட்டு மக்களிடம் இது குறித்து உரையாற்றுகிறார்.
Similar News
News August 15, 2025
அணுஆயுத போர் என்னால் தடுக்கப்பட்டது: டிரம்ப்

கடந்த 6 மாதங்களில் 6 போர்களை, தான் நிறுத்தியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் மோதலின் போது 6 -7 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், தான் தலையிடவில்லை என்றால் அது அணுஆயுத போராக வெடித்திருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார். போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா காரணம் அல்ல என இந்தியா மறுத்தாலும், பேசும் இடங்களிலெல்லாம் தானே போரை நிறுத்தியதாக டிரம்ப் தம்பட்டம் அடித்து வருகிறார்.
News August 15, 2025
GALLERY: PM மோடியும்.. சுதந்திர தின தலைப்பாகையும்!

ஒவ்வொரு ஆண்டும் PM மோடி, சுதந்திர தினத்தில் கொடியேற்றும் போது, அவரின் தலைப்பாகை தனி கவனம் பெறுகிறது. ராஜஸ்தானி தலைப்பாகை அணிவதை வழக்கமாக கொண்டுள்ள அவர், அதன் நிறத்தை மட்டும் ஒவ்வொரு ஆண்டும் மாற்றுகிறார். 5 மீட்டர் துணியில் தயாரிக்கப்படும் இந்த தலைப்பாகை சுயமரியாதையின் அடையாளமாக கருதப்படுகிறது. 2014- 2025 வரை PM மோடி அணிந்த தலைப்பாகைகளை மேலே அடுத்தடுத்த படங்களில் கொடுத்துள்ளோம்.
News August 15, 2025
வைரமுத்து ‘Me too’ குற்றவாளி: ஒருமையில் சாடிய H.ராஜா

வைரமுத்து ஒரு ‘Me too’ குற்றவாளி, அவர் மீது பல பெண்கள் புகார் அளித்துள்ளதாக H.ராஜா கடுமையாக சாடியுள்ளார். திமுக ஆட்சி என்பதால் வைரமுத்து இன்னும் கைது செய்யப்பட்டவில்லை என்றும் விமர்சித்துள்ளார். ராமரை அவமரியாதையாக பேசிய வைரமுத்து ஒரு மனநோயாளி எனவும் அவரை ஒருமையில் சாடியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் <<17369941>>வைரமுத்து ராமரை இழிவுபடுத்தியதாக <<>>ஏற்கெனவே போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.