News March 28, 2024
795 அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடியில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு கடந்த 23 ஆம் தேதி பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் 795 அரசு ஊழியர்கள் கலந்து கொள்ளவில்லை. இவர்களுக்கு காரணம் கேட்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது .மேலும் 2 நாட்களில் பதிலளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 26, 2025
தூதுக்குடி: PF-ல் சந்தேகமா? நாளை சிறப்பு முகாம்!

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் நாளை (நவ. 27) ESI, PF குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில், இஎஸ்ஐ காப்பீட்டாளர்கள், பயனாளர்கள், வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், ஓய்வு ஊதியம் பெறுவோர், தொழிலதிபர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என இணை இயக்குனர் பாஸ்கர் தெரிவித்துள்ளார். SHARE
News November 26, 2025
தூத்துக்குடி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தூத்துக்குடி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 26, 2025
தூத்துக்குடி: ஆட்டோ கவிழ்ந்து குழந்தை பலி

தூத்துக்குடி: வேம்பாரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் அந்தோணி மைக்கேல் ராஜ் தனது ஒரு வயது மகன் மித்ரன் மற்றும் மனைவியுடன் சாயல்குடிக்கு நேற்று ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது, கடற்கரை சாலையில் திடீரென ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காயம் அடைந்த மித்ரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


