News December 4, 2024

தினமும் 777 பேருக்கு நாய் கடி!

image

ஒடிசாவில் கடந்த 22 மாதங்களில் நாள் ஒன்றுக்கு 777 பேரை நாய்கள் கடித்துள்ளன. ஜனவரி 2023 முதல் அக்டோபர் 2024 வரை 5 லட்சத்திற்கும் அதிகமான நாய் கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 2023இல் 2,59,107 நாய் கடி சம்பவங்கள் பதிவான நிலையில், 2024 ஜனவரி முதல் அக்டோபர் வரை 2,43,565 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதன் காரணமாக தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதில் அம்மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறதாம்.

Similar News

News September 18, 2025

தமிழக அரசுக்கு CPM எச்சரிக்கை

image

தமிழக அரசு, தொழிலா​ளர்​களின் கோரிக்​கைகளை நிறைவேற்​று​வ​தில் உரிய அக்​கறை செலுத்​த​வில்லை என்​றால், அதை எதிர்த்து போராடு​வதை தவிர வேறுவழியில்லை என CPM பெ.சண்முகம் எச்சரித்துள்ளார். போக்குவரத்து ஊழியர்கள், தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை குறிப்பிட்ட அவர், எவ்வித அடிப்​படை வசதி​களும் இல்​லாமல் கொடுமையான சுரண்​டல் ஒப்​பந்த முறை தமிழகத்​தில் நடந்து கொண்​டிருப்பதாக குற்றம்சாட்டினார்.

News September 18, 2025

டிராவிட்டை குறிவைக்கும் 3 IPL அணிகள்

image

கடந்த IPL சீசனில் ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார் ராகுல் டிராவிட் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், வரும் சீசனுக்கு டெல்லி, கொல்கத்தா, லக்னோ அணிகள் ராகுல் டிராவிட் இடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்தான அறிவிப்பு மினி ஏலத்திற்கு முன்னர் வர வாய்ப்புள்ளது.

News September 18, 2025

தவெகவை வேரிலேயே கிள்ளி எறியணும்: வினோஜ் பி.செல்வம்

image

எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக எப்படியெல்லாம் வளர்ச்சியை தடுத்ததோ, அப்படி இப்போது தவெக செயல்படுவதாக வினோஜ் பி.செல்வம் தெரிவித்துள்ளார். புதிதாக அரசியலுக்குள் நுழைந்துள்ள விஜய்யை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நக்சல்களின் மனநிலையில் தவெக என்ற கட்சி தொடங்கப்பட்டிருக்கிறது. அதை (தவெக) வேரிலேயே கிள்ளி எறிய வேண்டும். அதை உறுதியுடன் கட்டாயம் செய்து முடிக்க வேண்டியது நமது கடமை என கூறியுள்ளார்.

error: Content is protected !!