News April 28, 2025
77 நீதிபதிகள் பணியிட மாற்றம்

மாவட்ட நீதிபதிகள் 77 பேரை பணியிட மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அல்லி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 13-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி நந்தினி தேவி காலையில் அறிவித்த நிலையில், மாலையில் அவர் மாற்றப்பட்டுள்ளார்.
Similar News
News December 6, 2025
டிச.19-ல் இலவச லேப்டாப் வழங்கும் CM ஸ்டாலின்

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை வரும் 19-ம் தேதி CM ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நந்தனத்தில் நடைபெறவுள்ள விழாவில் முதற்கட்டமாக 20 மாணவர்களுக்கு CM ஸ்டாலின் லேப்டாப் வழங்க உள்ளார். 2026 பிப். மாத இறுதிக்குள் 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க அரசு 3 நிறுவனங்களுக்கு டென்டர் ஒதுக்கீடு செய்துள்ளது.
News December 6, 2025
BREAKING: விஜய் கட்சியில் இணையவில்லை

விஜய்யுடன் இணையவிருப்பதாக வரும் தகவலில் உண்மை இல்லை என Ex அமைச்சரும், OPS அணி MLA-வுமான வைத்திலிங்கம் கூறியுள்ளார். OPS அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். அதன் பின்னர், தவெகவில் இணைந்த செங்கோட்டையன், வைத்திலிங்கத்திற்கு அழைப்பு விடுத்ததாக பேசப்பட்டது. பேரவைத் தேர்தல் நெருங்குவதால் திமுக, அதிமுக, உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக்கட்சியினரை வளைக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.
News December 6, 2025
விமானங்கள் ரத்து: ரயில்களில் கூடுதல் பெட்டிகள்!

<<18473444>>இண்டிகோ<<>> நிறுவன பிரச்னையால் ஏற்பட்டுள்ள விமானங்களின் ரத்து காரணமாக, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த நெருக்கடியை குறைக்க, இந்திய ரயில்வே நிர்வாகம் 37 முக்கிய ரயில்களில் 116 கூடுதல் பெட்டிகளை இணைத்துள்ளது. மேலும், 114 கூடுதல் பயணங்களையும் (Trips) அறிவித்துள்ளது. அதிகபட்சமாக தெற்கு ரயில்வேயில் மட்டும் 18 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.


