News April 13, 2025
75 வயது மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறல்

செங்குன்றம் அருகே சிரங்காவூர் கிராமத்தைச் சேர்ந்த 75வயது மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். கடந்த 8 ம் தேதி, மூதாட்டி வீட்டில் தனியாக இருந்த போது, வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். மூதாட்டி கூச்சலிடவே வாலிபர் தப்பியோடினார். புகாரின் அடிப்படையில் விச்சூரை சேர்ந்த தமிழன்பன் சந்துரு (23) என்பவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News April 15, 2025
திருவள்ளூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உட்கோட்ட பகுதிகளில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News April 15, 2025
திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி பலி

திருவள்ளூர், கனகம்மாசத்திரம் அருகே காவேரி ராஜபுரம் கிராமத்தில் நேற்று இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள் முனிரத்தினம் என்பவரை டிரான்ஸ்பார்மரில் ஏறி பியூஸ் போடக் கூறியுள்ளனர். அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். *மின்சாரத்தை கையாளுவதை தவிர்க்கவும்*
News April 15, 2025
திருவள்ளூர்: கடன், நோய் தீர்க்கும் திருக்கோயில்

திருவள்ளூர் மாவட்ட வட எல்லையில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணிகை மலை அமைத்துள்ளது. அங்கு வீற்றிருக்கும் முருகனை தணிகாசலம் என்று பக்தர்கள் வழிபடுகின்றனர். இந்த கோவிலில் வந்த முடி காணிக்கை செய்தால் எதிரிகள் தொல்லை, கடன், நோயிலிருந்து விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. *எதிரிகள், கடன், நோய்களில் பாதிக்கப்பட்டிருக்கும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு இதை ஷேர் செய்யவும்*