News August 17, 2024
75 இடங்களில் மின்சார வாகன ஸ்வாப்பிங் நிலையங்கள்

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், அதில் சார்ஜ் செய்யும் நேரத்தை மிச்சப்படுத்தவும், சென்னையில் 75 இடங்களில் அரசுடன் இணைந்து தனியார் நிறுவனம் 75 இடங்களில் ஸ்வாப்பிங் நிலையங்களை அமைக்கிறது. இங்கு சார்ஜ் காலியான பேட்டரியை ஒப்படைத்து விட்டு, 2 முதல் 5 நிமிடங்களில் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை பெற முடியும். பேட்டரியின் தன்மைக்கு ஏற்ப கட்டணம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 10, 2025
2026-இல் அதிமுகதான் ஆட்சி அமைக்கும்-இ.பி.எஸ்

சென்னை, வானகரத்தில் இன்று (டிச.10) அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், பொதுச்செயலாளர் பழனிசாமி பேசி பேசினார். அதில், “கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 43 சட்டமன்ற தொகுதிகளில் 2 லட்சம் வாக்குகளை இழந்ததால் தான், நாம் ஆட்சியை இழந்தோம். எனவே, இதை மாற்றுவது பெரிய விஷயமல்ல. நம்மிடம் சிறந்த தேர்தல் வியூக வகுப்பாளர்கள் உள்ளனர். நிச்சயம் இந்த முறை நாம் தான் ஆட்சி அமைப்போம்” என தெரிவித்தார்.
News December 10, 2025
2026-இல் அதிமுகதான் ஆட்சி அமைக்கும்-இ.பி.எஸ்

சென்னை, வானகரத்தில் இன்று (டிச.10) அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், பொதுச்செயலாளர் பழனிசாமி பேசி பேசினார். அதில், “கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 43 சட்டமன்ற தொகுதிகளில் 2 லட்சம் வாக்குகளை இழந்ததால் தான், நாம் ஆட்சியை இழந்தோம். எனவே, இதை மாற்றுவது பெரிய விஷயமல்ல. நம்மிடம் சிறந்த தேர்தல் வியூக வகுப்பாளர்கள் உள்ளனர். நிச்சயம் இந்த முறை நாம் தான் ஆட்சி அமைப்போம்” என தெரிவித்தார்.
News December 10, 2025
ஆட்சியில் பங்கு இல்லை: தம்பிதுரை

சென்னை வானகரத்தில் இன்று (டிச.10) அதிமுகவின் செயற்குழு & பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் எம்.பி. தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆட்சியில் பங்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைப்பார். அதிமுக தலைமையிலான ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது” என்றார்.


