News April 19, 2024

தமிழகத்தில் 72.09% வாக்குப்பதிவு

image

தமிழ்நாட்டில் மாலை 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.67% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. இன்னும் பலர் டோக்கன் பெற்றுக் கொண்டு வாக்களிக்க வரிசையில் நிற்பதால் சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News November 16, 2025

முதல் டெஸ்ட்: 3-ம் நாள் ஆட்டம் தொடங்கியது

image

கொல்கத்தா டெஸ்டில், முதல் இன்னிங்ஸில் முதலில் பேட் செய்த தெ.ஆப்பிரிக்கா 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் பேட்டிங் செய்த இந்தியாவும் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனையடுத்து, தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கிய தெ.ஆப்பிரிக்க அணி, 2-ம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்தது. 63 ரன்கள் முன்னிலையில் 3-ம் நாள் ஆட்டத்தை தெ.ஆப்பிரிக்கா இன்று தொடங்கியுள்ளது.

News November 16, 2025

பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

image

திருவாரூர், கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, பருவமழை காலங்களில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வர். இதற்கான அவகாசம் நேற்றுடன் (நவ.15) முடிவடைந்தது. ஆனால், பல விவசாயிகள் பல்வேறு காரணங்களால் பயிர் காப்பீடு செய்யாததால், கால அவகாசம் கோரப்பட்டது. இந்நிலையில், நவ.30 வரை பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News November 16, 2025

மாற்றி மாற்றி பேசிய கே.என்.நேரு

image

திருப்பதி கோயிலுக்கு ₹44 லட்சம் நன்கொடை வழங்கியது குறித்து கே.என்.நேரு புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். கோயிலுக்கு 44 லட்சம் கொடுக்கும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்ற அவர், உறவினர் கொடுத்துவிட்ட பணத்தை கோயிலில் செலுத்தியதாக கூறியுள்ளார். முன்னதாக, நான் பணம் கொடுக்கக்கூடாதா என கோபமாக பேசியிருந்தார். இப்படி இவர் மாற்றி மாற்றி பேசியுள்ளது சர்ச்சையாகி உள்ளது.

error: Content is protected !!