News October 23, 2024
72 வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு 120 அடி ஆகும். அதைத் தொடர்ந்து கர்நாடகா மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து மேலும் மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 100 அடியை எட்டியுள்ளது. அதைத்தொடர்ந்து இன்று 72-வது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டி உள்ளது என்று குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 10, 2025
சேலம் அருகே சோகம்: பெண் விபரீத முடிவு

சேலம் பெரிய கவுண்டபுரத்தை சேர்ந்த பிரவீன். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த சௌந்தர்யா என்பவரை, காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று இரவு சௌந்தர்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கணவனிடம் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
News December 10, 2025
ஓமலூர்: பெண்களை கட்டிப்பிடித்த வாலிபர் கைது!

ஓமலூர் அடுத்த பச்சினம்பட்டி மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் வேலைக்கு செல்லாமல் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இந்த நிலையில் தொடர்ச்சியாக புகார் வந்த நிலையில் ஓமலூர் காவல்துறையினர் அவரை கண்காணித்து வந்தனர் நேற்று முன்தினம் இரவு தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அப்பொழுது அவரை பிடித்து கைது செய்தனர்.
News December 10, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.


