News February 12, 2025
தினமும் 700 கி.மீ. பயணித்து வேலைக்கு செல்லும் பெண்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739288101748_1204-normal-WIFI.webp)
வேலைக்காக தினமும் பல கி.மீ. தூரம் வரை பயணிப்பவர்கள் உண்டு. ஆனால், ஊர் விட்டு ஊர் செல்வது போல 700 கி.மீ. பயணித்து வேலைக்கு செல்பவரை பார்த்தது உண்டா? மலேசியாவின் பெனாங் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரேச்சல் கெளர் என்பவர், தினமும் கொலாலம்பூர் வரை விமானத்தில் 700 கி.மீ. பயணித்து வேலைக்கு சென்று வருகிறார். குடும்பத்தினரை மிஸ் செய்யக்கூடாது என்பதால் இப்படி பயணிக்கிறாராம்.
Similar News
News February 12, 2025
தினமும் ஒரு பொன்மொழி!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739296200233_785-normal-WIFI.webp)
✍அரசியல் அதிகாரம் வாக்களிப்பவர்களிடம் தங்கியில்லை; அரசியல் அதிகாரம் வாக்குகளை எண்ணுபவர்களிடம் தங்கியுள்ளது. ✍வரலாற்றை உருவாக்குவது நாயகர்கள் அல்ல; வரலாறுதான் நாயகர்களை உருவாக்குகிறது. ✍பட்டுக் கையுறைகளுடன் உங்களால் புரட்சி செய்ய முடியாது. ✍நான் யாரையும் நம்புவதில்லை; என்னையே கூட நம்புவதில்லை. ✍இந்த உலகில் வெல்ல முடியாத படைகளே இல்லை என்பதைத் தான் வரலாறு காட்டுகிறது – ஜோசப் ஸ்டாலின்.
News February 12, 2025
மம்தா மீது நிர்மலா சீதாராமன் பாய்ச்சல்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1738535532075_1204-normal-WIFI.webp)
மத்திய அரசு திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதியை சுரண்டி, மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு மிகப்பெரும் ஊழலில் ஈடுபட்டு வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளார். 100 நாள் வேலைத்திட்டத்தில், 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றியதாக போலி கணக்கு காண்பித்து, மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்ததாக சாடிய அவர், மாநிலத்தை முன்னேற்ற எதிர்கால திட்டங்களோ இல்லை என்றும் விமர்சித்தார்.
News February 12, 2025
குட்டை உடை அணிவது குற்றமல்ல: நீதிமன்றம்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739300220444_785-normal-WIFI.webp)
பாரில் ஆபாச நடனம் ஆடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட 7 பெண்களை டெல்லி நீதிமன்றம் விடுவித்தது. பொது இடங்களில் குட்டையான உடைகளை அணிவது குற்றமல்ல எனவும், அவர்களின் நடனம் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினாலே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தியது. குட்டை உடையணிந்து ஆபாச நடனம் ஆடியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், இதனால் சங்கடத்திற்கு ஆளான சாட்சிகளை ஆஜர்படுத்த தவறியதாக நீதிமன்றம் கூறியது.