News May 27, 2024
மயோனைஸ் சாப்பிட்ட 70 பேர் மருத்துவமனையில் அனுமதி

கேரளாவில் உணவகத்தில் மயோனைஸ் சாப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூணுபீடிகை பகுதியில் உள்ள உணவகத்தில் குழிமந்தி என்ற உணவை 70 பேர் சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு சைடிஷாக மயோனைஸ் தரப்பட்டுள்ளது. இதனை சாப்பிட்ட அனைவருக்கும் ஒவ்வாமை ஏற்படவே, மருத்துவனையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களுக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Similar News
News March 10, 2026
பார்லிமென்ட் நடக்க ஒரு நாளைக்கு இவ்வளவு செலவா?

பார்லிமென்ட் அவை நடவடிக்கைக்காக ஒவ்வொரு நிமிடத்திற்கும் ₹2.50 லட்சம் செலவாவதாக சபாநாயகர் (பொறுப்பு) ஜெகதாம்பிகா பால் தெரிவித்துள்ளார். ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதிக்க கோரி எதிர்க்கட்சி MP-க்கள் லோக்சபாவில் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, அவை நடவடிக்கைகளுக்கு ஒரு நாளைக்கு ₹9 கோடி செலவாகிறது. ஆனால், மக்கள் பணத்தை எதிர்க்கட்சி MP-க்கள் வீணடிப்பதாக சாடியுள்ளார்.
News March 10, 2026
ஸ்டாலினுக்கு திமுக கூட்டணி கட்சிகள் நெருக்கடி

சென்னை மண்டலத்திற்குட்பட்ட தொகுதிகளை கேட்டு ஸ்டாலினுக்கு கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. பிரேமலதா தனக்காக விருகம்பாக்கம் தொகுதியை கேட்பதால், முடியாது எனக்கூற முடியாமல் திமுக தவிக்கிறதாம். அதேபோல், பெரம்பூர் அல்லது மதுரவாயல் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூ., ஆர்.கே.நகர் தொகுதியை விசிகவும் கேட்பதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் 1 தொகுதியை மட்டுமே கூட்டணிக்கு திமுக ஒதுக்கியது.
News March 10, 2026
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த கசாயம் அவசியம்!

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இலவங்கப்பட்டை – கிராம்பு கசாயம் குடிக்க சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ➤தேவையானவை: இலவங்கப்பட்டை – கிராம்பு , தேன்/ பனங்கற்கண்டு ➤செய்முறை: இலவங்கப்பட்டை – கிராம்பு இரண்டையும் இடித்து, தண்ணீரில் போட்டு 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். பிறகு வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து பருகலாம். இந்த அவசியமான தகவலை அனைவருக்கும் பகிருங்கள். SHARE.


