News May 4, 2024
குற்றவாளியை பிடிக்க 7 தனிப்படைகள் அமைப்பு

காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் கொலை வழக்கில், குற்றவாளியை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய நெல்லை காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், சமூக வலைதளங்களில் பரவி வரும் புகார் கடிதம் தன்னிடம் அளிக்கப்படவில்லை என்றார். மேலும், இந்த கொலையில் ஈடுபட்டவர்களை விரைவில் கைது செய்வோம் என்று உறுதியளித்தார். 2 நாள்களுக்கு முன்பு காணாமல் போன ஜெயக்குமார், இன்று சடலமாக மீட்கப்பட்டார்.
Similar News
News November 17, 2025
BREAKING: அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தார்

சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் EPS-ஐ தமிழ் மாநில காங்., தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அதிமுக தலைமையிலான NDA கூட்டணியை உறுதிசெய்த வாசன், தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசித்துள்ளார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், NDA கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வரவிருப்பதாகவும், 2026-ல் பிஹாரில் வென்றதை விட அதிக இடங்களில் NDA வெற்றிபெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News November 17, 2025
வெளிமாநிலங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயங்காது

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்படாது என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கேரளாவில் சமீபத்தில் ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, கடந்த 7 நாள்களுக்கு மேல் மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பஸ்கள் இயங்கவில்லை. இந்நிலையில், வெளிமாநிலங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயங்காது என்றும், முதல்வர் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் எனவும் கூறியுள்ளது.
News November 17, 2025
வருவாய்த்துறையினரின் டிமாண்ட் என்ன?

நாளை <<18309481>>ஸ்ட்ரைக்கில்<<>> ஈடுபடவுள்ள வருவாய் துறையினர் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்: *SIR பணியால் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் நெருக்கடி, மனஉளைச்சல் ஏற்படுகிறது. இதற்கு நடவடிக்கை தேவை *மீட்டிங் என்ற பெயரில் துன்புறுத்தக்கூடாது *SIR பணிக்கு உரிய கால அவகாசம் வேண்டும் *BLO, BLA-க்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் *பணிப்பளுவை கருத்தில் கொண்டு ஒரு மாத கால ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும்.


