News December 14, 2024
தமிழகத்தில் கனமழைக்கு 7 பேர் பலி

தமிழகத்தில் கனமழைக்கு 7 பேர் பலியாகியுள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கனமழையால் வீட்டு சுவர் இடிந்து ஒருவர் பலியானார். பண்ருட்டியில் ஒருவரும், வடலூர் அருகே மின்சாரம் தாக்கி ஒருவரும் பலியாகினர். ரெட்டிச்சாவடி மேல்அழிஞ்சிப்பட்டையில் செல்போனுக்கு சார்ஜ் போட்ட மாணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நாகை, வேதாரண்யம், அரியலூரிலும் தலா ஒருவர் பலியாகியுள்ளனர்.
Similar News
News March 28, 2026
தினமும் நடைபயிற்சி.. இவ்வளவு நன்மைகளா?

தினமும் நடைப்பயிற்சி செய்ய உடலுக்கும் மனதுக்கும் நன்மை தரும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். ▶10 நிமிடங்கள் நடந்தால் மனதில் அமைதி ஏற்படுகிறது. ▶15 நிமிடங்கள் நடந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வெகுவாக குறைகிறது. ▶30 நிமிடங்கள் நடந்தால் உடலில் தேவை இல்லாத கொழுப்பு கரைந்து வெளியேற தொடங்குகிறது. ▶45 நிமிடங்கள் நடந்தால் தெளிவான மனநிலை ஏற்படுகிறது. ▶60 நிமிடங்கள் நடந்தால் மனதில் உற்சாகம் பிறக்கிறது.
News March 28, 2026
டிரம்ப்-மோடி தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க்

போரைத் தொடர்ந்து டிரம்ப்பும் மோடியும் சமீபத்தில் தொலைபேசியில் பேசினர். இந்த உரையாடலில் எலான் மஸ்க் பங்கேற்றது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. எந்தவொரு அரசாங்க பதவியையும் வகிக்காத ஒரு தனிநபர், இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பது மிகவும் அரிதானது. குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை குறித்து பேசும்போது மஸ்க் ஏன் பங்கேற்றார் என்பது குறித்து தெளிவான எந்த தகவலும் இல்லை.
News March 28, 2026
வரலாற்றில் இன்று

➤1737 – மராட்டிய பேரரசுக்கும் முகலாய பேரரசுக்கும் இடையே முதல் டெல்லி போர் நடைபெற்றது. ➤1910 – கடல் விமானத்தில் பறந்த முதலாவது மனிதர் என்ற சாதனையை பிரான்ஸை சேர்ந்த ஹென்றி ஃபேப்ரே படைத்தார். ➤2005 – இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் 8.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 1000 பேர் வரை உயிரிழந்தனர். ➤1982 – நடிகை சோனியா அகர்வால் பிறந்த தினம். ➤2006 – வேதாத்திரி மகரிஷி மறைந்த நாள்.


